...

"வாழ்க வளமுடன்"

24 ஜனவரி, 2011

நண்பா... :) ( நான் ரசித்த கவிதை )

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


மாலை நேர தேநீர்
இறங்குவதே இல்லை...
செல்ல சண்டைளின்றி
அவை என்றும்
இனிக்காதாம்


இதுவரை ஒன்றாய்
நடந்து கடந்த சாலைகள்
கண்களை பொத்தி கொள்கின்றன
தனிமையில் எனை காண
பிரியமில்லையாம்


கை ஈரம் துடைக்க
நீ தரும் கைகுட்டையை
தேடி அழுது
அடம் பிடிக்கின்றன
விரல்கள்


பேருந்து பயணங்களில்
சாய்ந்து தூங்க
உன் தோள்கள்
இல்லாமல் இமைகள்
மூடுவதேயில்லை


சண்டை போட்டு
உன்னிடம் பிடுங்கி
சாப்பிடும் சாக்லேட்டின் சுவை
ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்
உணவிலும் கிடைப்பதில்லை


கைகோர்த்து திரிந்த
நாட்களை எண்ணும்போது
துளிர்க்கும் கண்ணீரினூடே
தூக்கம் கலையாதிருக்க
அசையாதிருந்த உன் நட்பு
புன்னகையாய் விரிகிறது


***
thanks அரசி
***



"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "