...

"வாழ்க வளமுடன்"

24 ஜனவரி, 2011

முட்டை மஞ்சள் கரு வேண்டாம்ங்க....

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


கருவுற்ற ஆரம்பக் கட்டங்களிலும், பிரசவம் நிகழ இருக்கும் கடைசி கட்டங்களிலும் உடலுறவைத் தவிர்க்க வேண்டும். கருவுற்ற காலங்களில் மார்பகங்கள் வளர்ச்சி பெறுவதால் மெல்லிய துணிகளால் ஆன `பிரா'வையே பயன்படுத்த வேண்டும். பருத்தி துணியாலான பிராக்கள் சிறந்தவை.


மார்புக்காம்புகளில் புண், வெடிப்பு, மார்பகக்கட்டி போன்றவை இருந்தால் மருத்துவரிடம் காண்பித்து உரிய சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். கருவுற்ற காலங்களில் பஸ், ஆட்டோ, ஸ்கூட்டர் போன்ற அதிர்வைத்தரும் வாகனங்களில் பயணம் செய்யக்கூடாது. மேலும் தொலைதூரப் பயணங்களைத் தவிர்ப்பதும் நல்லது.


பிரசவ காலங்களில் உதிரப்போக்கு, வயிற்றுவலி, தலைவலி, மயக்கம், தூக்கமின்மை, பார்வை குன்றுதல் போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். கருவுற்ற நாளிலிருந்து ஆறுமாதத்தில் மாதம் ஒரு முறையும், ஏழு-எட்டு மாதங்களில் 15 நாட்களுக்கு ஒரு முறையும், பிரசவத்தின் இறுதியில் வாரம் ஒரு முறையும் டாக்டரின் நேரடி மேற்பார்வையில் பரிசோதனைகளையும், ஆலோசனைகளையும் பெற வேண்டும்.


பால், முட்டை, பருப்பு வகைகள், கீரை வகைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றில் உடல் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் அடங்கியிருப்பதால் அவற்றைப் போதிய அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


அதிகக் கொழுப்பு நிறைந்த வெண்ணை, பாலாடை, நெய், ஐஸ்கிரீம், முந்திரி, பிஸ்தா, முட்டையின் மஞ்சள்கரு, தேங்காய் போன்றவற்றை அளவுக்கு அதிகமாக சேர்த்துக் கொள்ளக்கூடாது.


மலச்சிக்கல் ஏற்படாமலிருக்க கீரை வகைகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். கருவுற்ற பெண்ணின் ரத்த அழுத்த நிலைகளை, அவ்வப்போது அறிந்து கொள்வதில் சற்று அதிகக் கவனம் செலுத்த வேண்டும். கருவுறும் காலத்திற்கு முன்பே ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பின், அதற்கான சிகிச்சையை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.


கருவுற்ற பெண், தனக்கு ஏற்பட்டிருந்த/ஏற்பட்டிருக்கும் நோய்கள், அதன் பாதிப்புகள் குறித்து மருத்துவரிடம் தெளிவாக விளக்கிக் கூற வேண்டும். இது பிற்காலத்தில் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும்

***
thanks இணையம்
***



"வாழ்க வளமுடன்"


இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "