...

"வாழ்க வளமுடன்"

07 டிசம்பர், 2010

இதயத்தை ஆரோக்கியமாக வைக்க 8 வழிகள் !

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
பிரித்தானியாவில் இறப்புக்கு அதிகம் காரணமாக இருப்பது மார்படைப்பு. தற்போது உயிர் காக்கும் மருந்துகளின் உதவியால் பலர் பிழைக்கின்றனர் என்றாலும் கூட மீண்டும் மார்படைப்பு எப்போது வரும் என்பது தெரியாத நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர்.





வரும் முன் காப்பதே சிறந்தது என்பதால் இதய ஆரோக்கியத்தை பேண சில எளிய பயனுள்ள வழிமுறைகளை உங்களுக்காக அளிக்கிறது தமிழ் சி.என்.என்.

மன அழுத்தம் என்பது இயல்பாக மனிதர்கள் அனைவருக்கும் இருக்கக்கூடிய ஒன்று. சில ஹார்மோன்கள் இவற்றை கட்டுப்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைக்கும் வேலையை செய்து கொண்டிருக்கின்றன.

*

அதையும் தாண்டி அதிகமான மன அழுத்தம் ஏற்படும் போது இதயத்தில் கோளாறு உருவாவதாக கூறுகிறது மருத்துவத்துறை. இன்னொரு முக்கியமான காரணம் நாம் கடைப்பிடிக்கும் உணவுப் பழக்கவழக்கங்கள்.

*

இதய பலவீனத்திற்கு புகை பிடிப்பதும் புகையிலை சார்ந்த பிற பொருட்களை பயன்படுத்துவதும் மிக முக்கிய காரணம். கீழ்கண்ட அறிகுறிகள் உள்ளவர்களுக்கு மார்படைப்பிற்கான வாய்ப்புகள் அதிகம் எனபதால் ஒருமுறை மருத்துவரிடம் சென்று சோதனை செய்து கொள்வது நல்லது.

**

1. அடிக்கடி உணர்ச்சிவயப்படுதல்



2. எப்போதும் கவலையுடன் இருத்தல்



3. தினசரி செய்ய வேண்டிய வேலைகளை கூட செய்ய முடியாமல் திணறுதல்



4. வழக்கத்திற்கும் அதிகமாக உறுதியில்லாத நிலையில் இருப்பதாக உணர்தல்



5. மிக குறைவான பசி * ஒருமுகச் சிந்தனையில் சிரமம்



6. சரியான தூக்கமின்மை


**


இதயத்தை பாதுகாத்துக்கொள்ள சில எளிய வழிமுறைகள்:



1. ஓய்வெடுக்கும் போது தசைகளை தளர்ச்சியாக வைத்துக் கொண்டு , அது தொடர்பான உடற்பயிற்சிகளை மட்டும் செய்தல்.

*

2. நாம் சாப்பிடக் கூடிய காய்கறிகள், பழங்கள் , தானியங்கள் அனைத்திலும் கார்போஹைட்ரேட் இருக்கும். அதுவே உடலுக்கு ஆரோக்கியத்தையும் சக்தியையும் தருகிறது.

இதிலும் இரண்டு வகைகள் உண்டு.

ஒன்று எளிய கார்போஹைட்ரேட் உணவு மற்றுமொன்று கடின கார்போஹைட்ரேட்.

1. கோதுமை பாஸ்தா, கோதுமை ரொட்டி, தானியங்கள், சிகப்பு அரிசி, ஓட்ஸ், கோதுமை நூடில், உருளைக்கிழங்கு போன்ற உணவுப்பொருட்களில் இருப்பவை கடின கார்போஹைட்ரேட். இவற்றில் ஸ்டார்ச் மற்றும் நார்ச்சத்து அதிகாமாக இருக்கும்.
அதே நேரத்தில் இந்த வகை உணவுகள் சக்தியை சிறிது சிறிதாக நீண்ட நேரத்திற்கு வெளியிடும் ஆற்றல் கொண்டவை என்பதால் இது போன்ற உணவுப்பொருட்களை அதிகம் பயன்படுத்துவது நல்லது.

*

3. இதய தசைகள் பலவீனமாகி உடலின் பல பகுதிகளுக்கும் ரத்த ஓட்டம் சீராக இல்லாத நிலையில் பெரும்பாலும் இதயத்தில் கோளாறுகள் உண்டாகும். அதனால் செரிமானக்குறைவு ஏற்ப்பட்டு வயிற்று வலிகளும் உண்டாகலாம். எனவே அடிக்கடி வயிற்று வலி ஏற்படும் போதே அலட்சியமாக இருக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.

*

4. மன அழுத்தம் பல்வேறு வகைகளில் ஏற்படலாம். இதய நோயால் பாதிக்கப்படுபவர்களில் நான்கில் ஒருவர் மனஅழுத்தத்தாலேயே இந்த நோய்க்கு ஆளாவதாக மருத்துவ குறிப்புக்கள் கூறுகின்றன. எனவே எப்போதும் மனதை இலேசாக வைத்துக் கொள்ளவும் மகிழ்ச்சியுடன் பிரச்சினைகளை எதிர்கொள்ளவும் பழகுவது நல்லது.

*

5. உடல் பருமனாக இருப்பவர்கள் கூட உடற்பயிற்சி, தினமும் 2 மைல் நடை ஆகிவற்றை செய்து உடலை திடமாக வைத்திருந்தால் இதய நோய் வருவது குறையும்.

*

6. இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கூட உடற்பயிற்சி செய்யலாம். அதற்கென தனியே எளிய உடற்பயிற்சிகள் உண்டு. மருத்துவரின் ஆலோசனைப்படி அந்த உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுவது நல்லதே.

*

7. இரத்தத்தில் இருக்கும் கொழுப்புச் சத்தை குறைக்கக் கூடிய பானங்களையும், மருந்துகளையும் மருத்துவரின் ஆலோசனைக்குப் பின் கடைபிடிப்பதும் சிறந்தது.

*

8. ஆல்கஹால் கலந்த பானங்களை அளவோடு மிக குறைவாக குடிப்பதால் இதயத்திற்கு கெடுதல் இல்லை என்றும் அதே நேரம் அதுவே அளவுக்கு மீறினால் மார்படைப்பு உண்டாக வழிவகுக்கும் எனவும் சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.


***
thanks இணையம்
***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "