இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
புதிய அரிசி![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYnD695m-7HBTuepckLoHzxdBhKHHjcNew-jXXclir_lb4ChnBF8Ugr6zyccjb1wHuef0hhMVtnm6fQEGAk1E_rrapXhEg4Pc6BT6pssIy8By1Wp9oI2r9vcWVPNH1-3bTBYxSb9t7CaRH/s320/1.jpg)
சமைக்காமலே சாப்பிடக்கூடிய கோமல் சாயல் எனப்படும் புதுவகை அரிசியை ஒரிசா விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
*
ஒரிசா மாநிலம் கட்டாக் பகுதியில் உள்ள சென்ட்ரல் ரைஸ் ரிசர்ச் இன்ஸ்டியூட்டைச் (சிஆர்சிஐ) சேர்ந்த விஞ்ஞானிகள் புதுமையான அரிசி ரகங்களை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
*
இவர்கள் தொடர்ந்து மேற்கொண்ட ஆராய்ச்சியின் பயனாக அரிசியை வெந்நீரில் வேகவைக்காமல், வெறும் தண்ணீரில் அரைமணி நேரம் ஊறவைத்த பின்னர் அதனை அப்படியே எடுத்து சாதமாக சாப்பிடும் அரிசி வகையை உருவாக்கியுள்ளனர்.
*
இதுகுறித்து விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், தற்போது பயன்படுத்தும் அரிசி வகைகளில் அமிலோஸ் எனப்படும் சத்து 20 முதல் 25 சதவீதம் வரை இருப்பதால் அரிசிகள் ஒருவித கனத்த தன்மையூடன் இருக்கும். இதனால் அரிசியை வேகவைத்து சாப்பிடவேண்டியுள்ளது.
*
ஆனால் நாங்கள் தயாரித்துள்ள கோமல் சாயல் என பெயரிடப்பட்ட இந்த அரிசியில் அமிலோஸ் 4.5 சதவீதத்துக்கும் குறைவாகத்தான் இருக்கும். எனவே லேசான தன்மையூடன் இருக்கும்.
*
இவ்வகை அரிசியை அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் அப்படியே சாதம்போல் சாப்பிடலாம் என்று தெரிவித்தார்.
***
நன்றி தினகரன்.
http://kangalkanadhaathisayam.blogspot.com/2010/04/blog-post_11.html
***
"வாழ்க வளமுடன்"
![](http://signatures.mylivesignature.com/54488/113/21112893B7EDA220127ECA6E3E8FB5DB.png)
2 comments:
ஆச்சரியமாக இருக்கின்றது...சூப்பர்ப்...
நன்றி கீதாக்கா. உங்கள் வருகைக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி.
கருத்துரையிடுக