...

"வாழ்க வளமுடன்"

06 ஆகஸ்ட், 2010

சமைக்காமலே சாப்பிடும் புதிய அரிசி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
புதிய அரிசி



சமைக்காமலே சாப்பிடக்கூடிய கோமல் சாயல் எனப்படும் புதுவகை அரிசியை ஒரிசா விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.


*



ஒரிசா மாநிலம் கட்டாக் பகுதியில் உள்ள சென்ட்ரல் ரைஸ் ரிசர்ச் இன்ஸ்டியூட்டைச் (சிஆர்சிஐ) சேர்ந்த விஞ்ஞானிகள் புதுமையான அரிசி ரகங்களை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.



*


இவர்கள் தொடர்ந்து மேற்கொண்ட ஆராய்ச்சியின் பயனாக அரிசியை வெந்நீரில் வேகவைக்காமல், வெறும் தண்ணீரில் அரைமணி நேரம் ஊறவைத்த பின்னர் அதனை அப்படியே எடுத்து சாதமாக சாப்பிடும் அரிசி வகையை உருவாக்கியுள்ளனர்.




*



இதுகுறித்து விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், தற்போது பயன்படுத்தும் அரிசி வகைகளில் அமிலோஸ் எனப்படும் சத்து 20 முதல் 25 சதவீதம் வரை இருப்பதால் அரிசிகள் ஒருவித கனத்த தன்மையூடன் இருக்கும். இதனால் அரிசியை வேகவைத்து சாப்பிடவேண்டியுள்ளது.




*


ஆனால் நாங்கள் தயாரித்துள்ள கோமல் சாயல் என பெயரிடப்பட்ட இந்த அரிசியில் அமிலோஸ் 4.5 சதவீதத்துக்கும் குறைவாகத்தான் இருக்கும். எனவே லேசான தன்மையூடன் இருக்கும்.



*


இவ்வகை அரிசியை அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் அப்படியே சாதம்போல் சாப்பிடலாம் என்று தெரிவித்தார்.



***


நன்றி தினகரன்.

http://kangalkanadhaathisayam.blogspot.com/2010/04/blog-post_11.html


***

"வாழ்க வளமுடன்"

2 comments:

GEETHA ACHAL சொன்னது…

ஆச்சரியமாக இருக்கின்றது...சூப்பர்ப்...

prabhadamu சொன்னது…

நன்றி கீதாக்கா. உங்கள் வருகைக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி.

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "