...

"வாழ்க வளமுடன்"

14 பிப்ரவரி, 2010

கொலஸ்ட்ரால் பற்றிய மேலும் சில துளிகள்.

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

கொலஸ்ட்ரால் வருவது எப்படி?

கொலஸ்ட்ரால் - நாம் சாப்பிடும் சில உணவு வகைகள், மன அழுத்தம், பழக்க வழக் கங்களால் ஏற்படும் கொழுப்பு இது. ரத்தத்தில் ஓரளவு வரை கொழுப்பு சேரலாம்; ஆனால், அளவு மிஞ்சினால் ஆபத்து தான். அப்போது தான் அது இதயம் வரை லொள்ளு செய்ய ஆரம்பித்து விடுகிறது. ரத்தத் தில் சேரும் கொழுப்பு, சிறிது சிறிதாக அதிகமாகி, இதய ரத்தக்குழாயில் உள்ள சுவருடன் ஒட்டி, அதை தடிமனாக் குகிறது. அப்போது ரத்தம் சீராக போக முடியாமல் போகிறது. அதனால், ரத்தம் கட்டி விடுகிறது. அப்படி கட்டிவிடும் போது, ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுகிறது. ரத்தக் குழாயில் அடைப்பு ஏற் பட்டால், இதய பாதிப்பு வருகிறது; மாரடைப்பு ஏற்படுகிறது.
நல்ல கொலஸ்ட்ரால் கொழுப்பு வேறு; கொலஸ் ட்ரால் வேறு; ஆனால், கொழுப்பில் இருந்து பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவது தான் கொலஸ்ட் ரால். ஓரளவு கொழுப்பு , நம் உடலுக்கு நல்லது மட்டுமல்ல; செல்கள், உறுப்புகள் வளர்ச்சிக்கு மிக முக்கியமாக உதவுகிறது. அதே கொழுப்பு, அதிகரிக் கும் போது, கெட்ட கொழுப் பாக மாறுகிறது. அப்போது தான் கொலஸ்ட்ரால் என்று கணக்கிடப்படுகிறது.
இரு வகை கொழுப்பு
எல்.டி.எல்: "லோ டென் சிட்டி லிப்போப் ரோட் டீன்ஸ்' என்று அழைக்கப்படும் எல்.டி.எல்., கொலஸ்ட்ரால், மிக ஆபத்தானது. அதிக அளவில் ரத்தத்தில் சேர்ந்தால், ரத்தக்குழாய் சுவரில் படிந்து, அதை அடைக்கிறது. ரத்தக்குழாய் அடைப்புக்கு இது தான் முக்கிய காரணம்.
எச்.டி.எல்: "ஹை டென்சிட்டி லிப்போப்ரோட்டீன்' என்று அழைக்கப்படும் அதிக அடர்த்தி உள்ள கொலஸ்ட்ரால். இது உடலில் அதிகமாக சேர்ந்தாலும், கல்லீரலுக்கு போய், அங்கிருந்து கழிவாக வெளியேறி விடும்.
ட்ரைகிளிசரைட்ஸ்:
இது மூன்றாவது வகை கொழுப்பு. தசைநார்களுக்கு எனர்ஜியை தரும் இது, அதிகமாகும் போது கொழுப்பாகி, ரத்தத்தில் சேர்கிறது. இதய பாதிப்பு வரும் போது, ரத்தத்தில் இதன் அளவும் சரிபார்க்கப்படுகிறது.
உணவால் தான்...
கொலஸ்ட்ரால் ஏற்பட காரணம் பல உண்டு என்றாலும், நாம் சாப்பிடும் உணவால் தான் ஏற்படுகிறது. கொழுப்புஉணவால், உடலில் கொழுப்பு அதிகமாகி, ரத்தத்தில் கொலஸ்ட்ராலாக சேர்கிறது. வயிறு வழியாக உணவு சென்றவுடன், கல்லீரலில் கொழுப்பு பிரிந்து, கொலஸ்ட்ராலாக ரத்தத்தில் சேர்கிறது.
200க்கு மேல் உஷார்
*கொலஸ்ட்ரால் எல்லாருக் கும் இருக்கும்; அது 200 க்குள் இருக் கும் வரை பிரச்னை பண்ணாது.*ஆபத்தான அளவு என்பது 200ல் இருந்து 239 வரை. அப்போது கண்டிப்பாக விழித் துக்கொள்ள வேண்டும்.
*240 ஐ தாண்டி விட்டால், இனியும் சும்மா இருந்தால், அவ்ளோ தான். அலட்சியம், விபரீதத்துக்கு வழி வகுத்து விடும்.
*200, 240 என்றெல்லாம் சொல்லப்படுவது என்ன தெரியுமா? ஒரு டெசிலிட்டர் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் மில்லி கிராம் தான்.
*எல்.டி.எல்.,எச்.டி.எல்.,மற்றும் ட்ரைகிளிசரைட்ஸ் ஆகியவற்றிலும் இந்த அளவு உண்டு. எல்.டி.எல்.,130க்குள் இருக்க வேண்டும்; எச்.டி.எல்.,60 க்கு மேல் இருக்க வேண்டும். ட்ரைகிளிசரைட்ஸ் 200 க்கு கீழ் இருக்க வேண்டும்.
பக்கவாதம் எப்படி?
இதய ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டால், மாரடைப்பு வருகிறது. அதுபோல, மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டால், பக்கவாதம் ஏற்படுகிறது. உடலில் நரம்புகள் இயங்கினால் தான் கை, கால்கள் இயங்குவது, வாய் பேசுவது , நடப்பது, மடக்குவது போன்றவை செய்ய முடியும். ரத்தம் சீராக செல்லாமல் போனால், மூளைக்கும் ஆக்சிஜன், சத்துக்கள் பாதிக்கப் பட்டு விடுகிறது; அதனால், அதன் இயக்கம் தடைபடுகிறது. அதனால், பக்கவாதம் ஏற்படுகிறது.
1.A. ஆரோக்கியமான ரத்தக்குழாய் இது. உயர் அடர்த்தி வாய்ந்த எச்.டி.எல்., கொலஸ்ட்ரால், ரத்தக்குழாயில் சென்று, மற்ற கொலஸ்ட்ராலையும் வெளியேற்றி, கழிவாக மாற்றி விடுகிறது.
1.B.ரத்தக்குழாய் சுவரில் படிந்திருப்பது தான் கெட்ட கொலஸ்ட்ரால். இது தான் ரத்தம் செல்வதை பாதித்து, ரத்தக்கட்டியை உருவாக்குகிறது.
மாரடைப்பு வருவது எப்படி?
இதயத்துக்கு ரத்தக்குழாய் மூலம் ரத்தம் வழியாகத்தான் ஆக்சிஜன், மற்ற சத்துக்கள் செலுத்தப்படுகின்றன. ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டால், ரத்தம் சீராக செல்வது தடைபடும்; ஆக்சிஜன், சத்துக்கள் செல்வது பாதிக்கப்படும். இதயத்தை எந்நேரமும் இயங்க செய்யும் இதய தசைகள் கடுமையாக பாதிக்கப்படும்; அது செயலிழக்கும் போது, இதயத்துடிப்பு பாதிக்கப்படுகிறது. அதன் அளவு சீராக இல்லாமல் போகிறது. இப்படி எல்லாம் தடைபடும் போது, மாரடைப்பு வருகிறது.
நன்றி ஈகரை.

2 comments:

அண்ணாமலையான் சொன்னது…

நல்ல பகிர்வு.. நன்றி..

prabhadamu சொன்னது…

நன்றி அண்ணா

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "