...

"வாழ்க வளமுடன்"

14 பிப்ரவரி, 2010

பூண்டின் மருத்துவ குணங்கள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்



இயற்கை நமக்கு கொடுத்துள்ள பல்வேறு மருத்துவப் பயன்கள் கொண்ட தாவரங்களில் பூண்டு மிகவும் குறிப்பிடத்தக்கது. பூண்டு சாப்பிட்டால் நாற்றம் வீசும் என்பதற்காக சிலர் அதை ஒதுக்கித் தள்ளுகின்றனர். இது முற்றிலும் தவறானது.



1. உடல் பருமனையும், ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும்.



2. இதய அடைப்பை நீக்கி இரத்த அழுத்தம் வராமல் காக்கும்.




3. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் மருந்தாகவும் பூண்டு விளங்குகிறது.



4. நாள்பட்ட சளித் தொல்லையையும், தொண்டை சதையை நீக்கும்.




5. மலேரியா, யானைக்கால், காசநோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்படும் சக்தி இதற்க்கு உண்டு.




6. தாய்மார்கள் இதை அதிகம் சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். எல்லா பெண்களுக்கும் மாதவிலக்குக் கோளாறுகளை சரி செய்கிறது.




7. தினமும் இரண்டு பல் பூண்டு சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.


8. பூண்டு உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தக் கூடியது. அதிகளவில் பயன்படுத்தினால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் உண்டாகும்.



9. பூண்டின் மருத்துவ சக்தி அபரீதமானது. சளி, ஜலதோஷம், இருமல், தலை பாரம் போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாக அது திகழ்கிறது.



10. நாக்கில் சுவையின்மை, பசி எடுக்காமை, வயிற்று உப்புசம்,மலச்சிக்கல் போன்ற வற்றுக்கும் இது சிறந்த நிவாரணி ஆகும்.




11. பூண்டு தினசரி சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது என்று ஆயுர்வேத மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உடைந்த எலும்புகளைக் கூடச் சரி செய்யும் சக்தியும் உள்ளதாம்.




12. வெண் குஷ்டம், குடல் வாயு, கொழுப்பு, சர்க்கரை வியாதி, மூலம், வாத நோய்களுக்கு பூண்டு சரியான மருந்தாகும்.




13. பூண்டின் மகத்துவத்துவம் அறிந்து அதை தினசரி உட்கொள்வது உடல் நலத்துக்கு மிகவும் பயனுள்ளதாகும்.

1 comments:

அண்ணாமலையான் சொன்னது…

நல்ல பதிவு... நன்றி

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "