...

"வாழ்க வளமுடன்"

17 மே, 2011

இரத்த நாளங்களைப் பாதிக்கும் உப்பு !

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

ஒரு வேளை உப்புச் சாப்பாடு இரத்த நாளத்தைக் கணிசமாகப் பலவீனப்படுத்தி உடல் முழுவதும் இரத்தம் பாய்ச்சப்படும் வேகத்தையும் குறைத்துவிடுகின்றது.

உப்புச் சாப்பாட்டை உட்கொண்ட 30 நிமிடங்கள் முதல் ஒரு மணித்தியாலத்திற்கு குறுதிச்சுற்று தற்காலிகமாக பெருமளவில் தடைப்படுகிறது என்று ஆய்வோன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
உப்பு உடன்பில் எந்தளவு விரைவாகப் பதிப்பினை ஏற்படுத்துகின்றது என்பது பற்றி ஆராய்ச்சி நடத்ட 16 ஆரோக்கியமான வளர்ந்தவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

இவர்கள் ஒவ்வொருவருக்கும் அதிகளவு உப்புக் கலந்த உணவு கொடுக்கப்பட்டது. இது 4 கிராம் உப்புக் கலந்ததாக இருந்தது. பின்னர் மிகக் குறைவாக 0.3 கிராம் உப்புக் கலந்த உணவும் கொடுக்கப்பட்டது. இந்த ஒவ்வொரு உணவின் பின்னரும் உடம்பில் இரத்த ஓட்டம் எந்தளவு சுமுகமாக உள்ளது என்று பரிசீலிக்கப்பட்டது.

இரத்த ஓட்டத்தைப் பரிசோதிக்க வழ்மையாகத் தெரிவு செய்யப்படும் கையின் மேல் பகுதி நாளத்தில்தான் இந்தச்சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்த இரத்த நாளம் இருதயத்திற்கு நேரடியாக பாய்ச்சிவிட்டாலுங்கூட இருதயம் சம்பந்தமான இரத்த ஒட்டக் குறியீட்டுக்கு இதுவே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

போசாக்கு சிகிச்சை சம்பந்தமான அமெரிக்க சஞ்சிகையொன்று வெளியிட்டுள்ள தகவலின் பிரகாரம், அதிக உப்புக் கலந்த உணவை உட்கொண்ட 30 நிமிடங்களில் இரத்த நாளங்கள் கணிசமான அளவு நலிவடைகின்றன.

ஒரு மணித்தியாலம் ஆனதும் இது மிக மோசமாகக் கட்டுப்படுத்தப்படுகின்றது. பொதுவாக உண்ணும் உணவில் கலக்கப்படும் உப்பின் அளவும் ஆரோக்கியமானவர்கள் மத்தியில் குறுதிச் சுற்றோட்டத்தைப் பாதிக்கக் கூடியது என்று ஆய்வாளர்கள் முடிவுசெய்துள்ளனர். இந்தப் பொறிமுறை தொடர்பில் இன்னும் விரிவான ஆய்வுகள் நடத்தப்படவேண்டிய தேவை உள்ளதாக இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உணவில் அதிக உப்புக் கலப்பது இரத்த நாளங்களை விறைப்பாக்குகின்றது. இது இருதயத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. பக்கவாதம், சிறுநீரகக் கோளாறுகள், ஓஸ்டியோபோராசிஸ் (எலும்பு மூட்டுக்களைப் பாதிக்கும் நோய்) மற்றும் வயிற்றுப் புற்று நோய் என்பனவற்றுக்கும் இது காராணமாயிருக்கின்றது.


***
thanks FoodIndia
***



"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "