...

"வாழ்க வளமுடன்"

25 ஏப்ரல், 2011

மருத்துவ ஆலோசனைகள் & வாசகர் கோள்வி பதில் :)

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

கிரீன் டீ' குடிப்பது உடலுக்கு நல்லதா? எஸ்.சிவானந்தா, மதுரை

கிரீன் டீ சீனாவில் நான்காயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உபயோகப்படுத்தப்படுகிறது. இதை தினமும் குடித்தால் பல வழிகளில் உடலுக்கு நன்மை தருகிறது. இது புற்றுநோய் வரும் தன்மையை குறைக்கிறது. கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்கிறது. இதில் E G C G என்ற சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது. இதனால்தான் அதன் நன்மைகள் பல வழிகளில் நமக்கு கிடைக்கின்றன.


இதுதவிர ரத்தக் குழாய்களில், ரத்தக்கட்டிகள் உருவாகாமல் பாதுகாக்கிறது. இதனால் மாரடைப்பு வரும் தன்மையும் பலமடங்கு குறைகிறது. இது, ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கிறது. தினமும் 2 கப் கிரீன் டீ குடித்தால் 6 வாரங்களில், ரத்தத்தில் எல்.டி.எல்., என்னும் கெட்டக் கொழுப்பு 13 மி.கி., என்ற அளவுக்கு குறைகிறது என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

***


எனக்கு கடந்த 2 ஆண்டுகளாக ரத்தக் கொதிப்பு உள்ளது. சமீபகாலமாக அடிக்கடி தலைச் சுற்றல் வருகிறது. இதற்கு என்ன செய்யலாம்? எல். சாரதா, கோவை



தலைச் சுற்றல் வர பல காரணங்கள் உள்ளன. மிக முக்கியமாக ரத்த அழுத்தம் கூடுலாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் தலைச் சுற்றல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, உங்கள் ரத்த அழுத்தத்தின் அளவு சரியாக உள்ளதா என கண்டறிவது முக்கியம். அதற்கேற்ப நீங்கள் எடுக்கும் மாத்திரையின் அளவை கூட்டவோ, குறைக்கவோ வேண்டியது வரும். அடுத்து மூளை, நரம்பு கோளாறுகளாலும் தலைச் சுற்றல் வர வாய்ப்பு உள்ளது. எனவே, ரத்த அழுத்தம் சரியாக இருந்தால் நரம்பு சம்பந்தமான பரிசோதனைகள் தேவைப்படும். இவற்றின் மூலம் எதனால் தலைச் சுற்றல் ஏற்படுகிறது என்பதைப் பொறுத்தே சிகிச்சை முறையும் அமையும்.


***


எனக்கு கடந்த 3 ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. இதற்காக நான், 'Glimepride மற்றும் Pioglitazone' மருந்துகளை எடுத்து வருகிறேன். சர்க்கரை நோய் நல்ல கட்டுப்பாட்டில் உள்ளது. நான் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்கிறேன். இருந்தாலும் உடல் எடை அதிகரித்து வருகிறது. நான் என்ன செய்வது? கே. ஜவஹர், விருதுநகர்



சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு வாழ்க்கை முறை மாற்றம், நடைப் பயிற்சி, மருந்துகள் அத்தியாவசியமானவை. சர்க்கரை நோயாளிகள் எடையை கட்டுப்பாட்டில் வைப்பது மிக முக்கியமானது. உங்களுக்கு எடை கூட காரணம் நீங்கள் எடுக்கும் கடிணிஞ்டூடிtச்த்ணிணஞு' மருந்து ஆகும். எனவே நீங்கள் உங்கள் டாக்டரிடம் கலந்து பேசி, இம்மருந்தை மாற்றிவிட்டு, வேறு மருந்தை பெறுவது அவசியமானது. மேலும் நீங்கள் தைராய்டு பரிசோதனையும் செய்து கொள்வதுநல்லது.


***

எனக்கு ரத்தக்கொதிப்பு உள்ளது. உணவில் கருவாடு, அப்பளம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளக் கூடாதென டாக்டர்கள் கூறுகின்றனர். வேறு வழியே இல்லையா? எஸ். மாடசாமி, ராமநாதபுரம்

நம் இந்திய உணவுப் பழக்கங்களில் மிகக் கொடூரமானது என்னவெனில், எண்ணெயில் பொரித்த உணவை உண்ணும் பழக்கம்தான். பொரித்த உணவு அயிட்டங்களை சாப்பிடுவதால் தான் ரத்தக் குழாய் நோய்களான மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படுகிறது. எனவே, பொரித்த உணவை அறவே தவிர்ப்பது நல்லதாகும். குறிப்பாக வடை, பஜ்ஜி, பூரி, முறுக்கு, அப்பளம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். எண்ணெயை தாளிக்க மட்டும் சிறிதளவு உபயோகிப்பது நல்லது. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் மேற்கண்டவற்றை கடுமையாக கடைபிடித்தாக வேண்டும். கருவாடு, அப்பளம், ஊறுகாய் போன்றவற்றில் உப்பு அதிகமாக இருப்பதாலும் அதை தவிர்ப்பது மிக அவசியம்.



டாக்டர் சி.விவேக்போஸ்,
மதுரை.


***
thanks தினமலர்
***






"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "