...

"வாழ்க வளமுடன்"

26 ஜூலை, 2011

பெண்களுக்கான அபாய அறிவிப்புகள்!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்




பெண்கள் பொதுவாகவே தமது வீட்டு வேலைகள் மற்றும் தொழில் வாழ்க்கையில் மிகவும் மும்முரமாக ஈடுபடுபவர்கள். அவர்களுக்குத் தமது உடலைப் பற்றிக் கவனிக்க போதிய நேரம் கிடைப்பதில்லை. குளிர்காலத்தில் கண்டிப்பாகப் பாவிக்க வேண்டிய மொய்சரைசர்களைப் பாவிப்பதற்குக் கூட அவர்களுக்கு நேரமில்லை.



உங்களுக்குத் தொடர்ச்சியாக முடி உதிர்கிறது என்றால் வழுக்கை ஏற்படுவதை நோக்கிச் செல்கிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் உங்கள் உடலை உடனடியாகக் கவனிக்க வேண்டிய நேரம் வருவதை சில அபாய அறிகுறிகள் கொண்டு தெரிந்துகொள்ள முடியும்.



இந்தக் கட்டுரையில் நாம் உங்களுக்கு எளிதாக கையாளப்படக்கூடிய 4 அபாய எச்சரிக்கைக் குறிகளை அடையாளப்படுத்தியுள்ளோம். வயது அதிகரிக்கும்போது இந்த எச்சரிக்கைக் குறிகளும் தென்படும். எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள விடயங்களை வாசித்துப் பாருங்கள்.



1. முடி உதிர்தல்

அன்றாடம் முடி உதிர்வதை எதிர்கொள்கின்றீர்களா? அப்படியானால் அவதானமாக இருங்கள். இது வழுக்கை, போசாக்கின்மை ஏதாவது ஒருவகை சர்க்கரை வியாதியின் அறிகுறியாக இருக்கலாம். இந்த சர்க்கரை வியாதிகள் அனட்ரோஜன் அல்லது ஹைப்பர்தைரோய்டிசத்துடன் தொடர்புபட்டிருக்கலாம். தைராய்டு அதிகரிப்பதன் காரணமாக ஏற்படக்கூடிய இந்த ஹைப்பர் தைரோய்டிசம் பெண்களில் 7 மடங்கு அதிகம் காணப்படுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.




2. தொடர்ச்சியான குளிர்

தொடர்ச்சியாக குளிரில் நடுங்குவது போன்ற உணர்வு ஆண்டு முழுவதும் தொடர்ந்தால் ஹைப்போதைராய்டிசம் காரணமாக இருக்கக்கூடும். இது பெண்களில் உடல் பருமன் அதிகரிப்பு, மலச்சிக்கல், முடி, தோல் மற்றும் நகம் வரட்சியடைதல் போன்றவற்றை ஏற்படுத்தும். இவை பொதுவாக பெண்களின் 50 வயதின் போது ஏற்படக்கூடியவை.




3. வரண்ட வாய் மற்றும் கண்கள்

குளிர்காலத்தில் பெரும்பாலான பெண்களுக்கு கண்கள், தோல் மற்றும் வாய் வரட்சியடைதல் ஏற்படுகிறது. குறைந்த ஈரப்பதம் மற்றும் அதிக வெப்பமான அறைகளில் இருப்பதன் காரணமாகவே இவை பொதுவாக ஏற்படக் கூடும். ஆனால் 40 முதல் 50 வயதுடைய பெண்கள் மத்தியில் ஏற்படக்கூடிய ளுதழசபசநn நோய்த்தாக்கத்தின் அறிகுறியாகக் கூட இது இருக்கலாம். இதனைக் கவனிக்காமல் விடுவதால் கண் பிரச்சினைகள், பற்சிதைவு, பல்லீறு நோய்கள் போன்றவை ஏற்படுவதுடன் இனப்பெருக்க மற்றும் ஜீரணத் தொகுதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனை முன்கூட்டியே அறிந்து சிகிச்சை பெறுவது தான் சிறந்த வழி.




4. அதிகமான வாயு


அதிகமான வாயுப் பிரச்சினை லக்டோஸ் சகிப்புத் தன்மையின்மை அல்லது உணவு ஒவ்வாமை காரணமாக ஏற்படக்கூடும். ஆனால், இது சிலவேளைகளில் உணவுப்பாதை வயிறு மற்றும் குடல்கள் தொடர்பான பிரச்சினைகளால் ஏற்பட்டதாகக் கூட இருக்கலாம். சமிபாட்டுத் தொகுதியில் புற்றுநோய் ஏற்படவதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம். அடிக்கடி சிறுநீர் கழித்தல், பெல்விக் மற்றும் அடிவயிற்றில் வலி ஏற்படல், சாப்பிடக் கடினமாக உணர்தல் அல்லது விரைவாக நிறைய சாப்பிட்ட உணர்வு ஏற்படல் போன்றவையும் கவனிக்கப்பட வேண்டிய அறிகுறிகள் தான்.


***

thanks vm

****





"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "