...

"வாழ்க வளமுடன்"

14 ஜூன், 2011

இறால் அவரைக்காய் மசாலா

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


தேவையான பொருட்கள்
இறால் – 1/4 கிலோ
அவரைக்காய் – 1/4 கிலோ
சாம்பார் வெங்காயம் – 200 கிராம்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணை – 1/2 குழிக்கரண்டி
பூண்டு – 6 பல்
புளி – கோலியளவு
கடுகு – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 4
கறிவேப்பிலை – 1 கொத்து

செய்முறை
* இறாலைச் சுத்தம் செய்து கொள்ளவும். அவரைக்காயை கழுவி நறுக்கிக் கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டுத் தாளிக்கவும்.

* பின்பு வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். இவை முக்கால் பாகம் வதங்கியவுடன் அவரைக்காயை சேர்த்து வதக்கி நீர் தெளித்து சிறிது வேகவிடவும்.

* பின்பு இறாலைச் சேர்த்து வதக்கி, மஞ்சள்தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.

* புளிக்கரைசல் ஊற்றி மசாலா வெந்து, கறிக்கலவையுடன் சேர்ந்ததும் உலர்ந்த பதத்தில் இறக்கவும்.


***

படத்திற்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை.... இறால்க்காக இட்ட படம்

***

thanks `செப்’ தாமு
***




"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "