...

"வாழ்க வளமுடன்"

30 ஜூன், 2011

கூரான பொருட்கள் எல்லாம் குத்துவது ஏன்?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


கூரான ஊசியானது துணி, அட்டை போன்ற பொருட்களை எளிதில் துளைத்துக் கொண்டு செல்வதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், இதுபோன்ற பொருட்களில் மழுங்கலான ஆணியால் குத்துவதற்கு கடினமாக இருக்கிறது. இதற்கு என்ன காரணம்?


கூரான ஊசியைச் செலுத்தும்போது முழுச்சக்தியும் அதன் முனை மீது செலுத்தப்படுகிறது. ஆனால், மழுங்கலான ஆணியில் முனையின் பரப்பு அதிகமாக இருப்பதால், அதே சக்தி அதிகப் பரப்பின் மீது செயல்பட வேண்டியிருக்கிறது. எனவே, அதே சக்தியைச் செலுத்தினாலும், மழுங்கலான ஆணியை விடக் கூரான ஊசியை உபயோகிக்கும்போது அதிக அழுத்தம் குறுகிய இடத்தில் பாய்கிறது.


அழுத்தத்தைக் குறிக்கும்போது சக்தியின் அளவை மட்டுமின்றி, அது செயல்படும் பரப்பின் அளவையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஒருவருக்கு 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்று மட்டும் சொன்னால், அதில் இருந்து இது அதிகமா, குறைவா என்று கண்டுகொள்ள முடியாது. ஏனெனில், இந்த சம்பளம் மாதத்திற்கா, வருடத்திற்கா என்பது தெரியாது.


அதுபோலத்தான் சக்தி குறித்த விஷயம். அது ஒரு சதுர சென்டி மீட்டர் மீது பரவியுள்ளதா, ஒரு சதுர மில்லி மீட்டரில் நூறில் ஒரு பங்குப் பரப்பின் மீது பரவியுள்ளதா என்பதைச் சார்ந்திருக்கிறது.


பனிச்சறுக்கு மட்டைகள் நம்மைப் பளபளப்பான வெண்பனியின் மீது எளிதில் எடுத்துச் செல்கின்றன. அவை இல்லாவிட்டால், நாம் பனியினுள் அழுந்திவிடுவோம். ஏன்? இம்மட்டைகளைப் போட்டுக் கொள்ளும்போது உடல் எடை அதிகப் பரப்பின் மீது பரவியுள்ளது.


மட்டைகளின் பரப்பு, நமது உள்ளங்கால் களின் பரப்பை விட 20 மடங்கு அதிகமாக இருக்கிறது என்று வைத்துக் கொண்டால், மட்டைகள் அணிந்திருக்கும் போது வெண்பனியின் மீது நாம் செலுத்தும் அழுத்தம், அவை இல்லாமல் இருக்கும்போது செலுத்தும் அழுத்தத்தை விட இருபது மடங்கு குறைவாக இருக்கும். ஏற்கனவே கூறியபடி, பனிச் சறுக்கு மட்டைகள் அணிந்து கொண்டால்தான் வெண்பனி நம்மைத் தாங்கும். அவை இல்லாவிட்டால், பனியினுள் நம் கால்கள் புதைந்துவிடும்.


***
thanks vayal
***




"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "