...

"வாழ்க வளமுடன்"

30 ஜூன், 2011

பெற்றோர்களே! உங்களுக்கான சில ஆலோசனைகள்….

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


பெற்றோர்கள் தான் தமது குழந்தைகளின் ஆரோக்கிய நலனில் முன் உதாரணமாக நடந்துகொள்ள வேண்டும். குழந்தைகளுக்குத் தேவையான, பெற்றோர்கள் தெரிந்திருக்க வேண்டிய 5 சுகாதார ஆலோசனைகள் இங்கே தரப்பட்டுள்ளன.


1. உணவுடன் விளையாடல்

குழந்தைப் பருவ உடற்பருமன் என்பது மிக அதிர்ச்சியூட்டும் சுகாதாரப் பிரச்சினையாக உள்ளது. இதனால் குழந்தைகளுக்குத் தெரிவிக்கப்படும் விடயங்கள், ‘அதிகம் வேண்டாத உணவுப் பொருட்களை சாப்பிட வேண்டாம், அதிகம் தெலைக்காட்சி பார்க்க வேண்டாம், வேண்டாம்…வேண்டாம்…வேண்டாம்…!’ என்பவை தான்.


ஆனால், உங்கள் குழந்தைகள் தமது வாழ்நாளிற்குத் தேவையான சரியான உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும் என்ற செய்திதான் இங்கு தரப்படுகிறது.


உங்கள் குழந்தைகளுக்குத் தேவையான ஆரோக்கிய உணவுப் பொருட்களை அவர்களைக் கவரும் வகையில் வடிவமைத்துக் கொடுக்க வேண்டும். குழந்தைகள் சொல்லப்படாத விடயங்கள் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆவலுடன் இருப்பவர்கள் என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம்.



2. கொழுப்பை உண்ணுதல்

மனித மூளை 60 வீதம் கொழுப்பை உள்ளடக்கியது. கொழுப்பு அமிலங்களை உட்கொள்ளுமாறு குறிப்பாக ஒமேகா-3 அமிலங்களை உட்கொள்ளுமாறு அதிகமானோர் தெரிவிப்பதற்கான காரணம் இது தான். இது குழந்தைகளின் மூளை வளர்ச்சியைத் துரிதப்படுத்தும்.


தானிய வகைகள் மற்றும் சால்மன், மஹி-மஹி போன்ற மீன் வகைகளில் கொழுப்பு மிக அதிகமாக உள்ளது. உங்கள் குழந்தைகள் மீன் உட்கொள்ள விரும்பாவிட்டால் குழந்தைகளுக்கான கிரில் எண்ணெயினை அவர்கள் உட்கொள்ளக் கொடுங்கள்.



3. மற்றவரைப் போல் இருத்தல்


பெற்றோரின் முரண்பாட்டு விடயங்களைக் குழந்தைகள் விரைவாக பின்பற்றத் தொடங்கி விடுவார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிரதி நியுரான்கள் உங்களது கெட்ட விடயங்களைச் செய்ய அவர்களையும் தூண்டும்.


குழந்தைகள் அடங்கலாக பெரும்பாலான னு குறைபாடு உள்ளது. அதனை அன்றாடம் உணவாகவோ அல்லது 15 நிமிடங்கள் வெயிலில் நின்றோ பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.



4. வீட்டுப்பாட வேலைகளை நிறுத்துதல்

படுக்கை நேரத்தில் தொலைக்காட்சிப் பெட்டியை மூடிவிடுங்கள். 3 முதல் 12 வயது வரை குழந்தைகளுக்கு ஒரு நாளில் 11 முதல் 12 மணித்தியாலங்கள் உறக்கம் தேவைப்படுகிறது. போதிய உறக்கத்தைப் பெற்றுக்கொள்ளாத குழந்தைகளின் நடத்தைகள் பிரச்சினைக்குரியனவாகிவிடும்.


எனவே குழந்தைகளைத் தம்முடைய வீட்டுப்பாடங்களை முன்கூட்டிய செய்ய வைத்துவிட்டு அல்லது நாளை செய்யலாம் எனக் கூறி நன்றாக உறங்கச் சொல்லுங்கள்.



5. திரும்பிப் பேசுதல்

கலந்துரையாடல்களின் போது உங்கள் குழந்தைகளை மையப்படுத்துங்கள். குழந்தைகளை அன்பு செய்வது மிக முக்கியமானது. அதைத் தான் அவர்கள் உங்களிடம் எதிர்பார்க்கிறார்கள்.


அது அவர்களின் ஒக்சிடாக்சின் மட்டத்தை உயர்த்தவும் செய்கிறது. எனவே உங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக உணர்வதோடு பல நல்ல விடயங்களைக் கற்றுக்கொள்ளவும் செய்வார்கள்.



***
thanks vanakkamnet
***




"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "