...

"வாழ்க வளமுடன்"

02 டிசம்பர், 2010

குழந்தை பேறுக்கு பின் வயிறு உப்புதா ?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
பிரசவத்திற்குப்பின்பு வயிறு உப்பிக்கொண்டே போகிறதே என்று நிறைய பெண்கள் கவலைப்படுவதுண்டு. அப்படிப்பட்ட பெண்களுக்கு அற்புதமான பாட்டி வைத்திய முறை இதோ:



"அந்தக் காலத்துல பிரசவத்தப்போ சில மருந்துகளை கட்டாயமா சாப்பிடுவாங்க... இப்பவும் பிரசவ லேகியம்னு விக்கிது... பிரசவத்தின் போது அத வாங்கி சாப்பிடலாம். பிரசவம் ஆகும் போது தச வாயுக்களும் இடம்பெயர்ந்து அங்கங்கே தங்கிக் கொள்ளும்.

*

அது வந்து வயிற்றில் இறங்காமல் இறுக துணியால கட்டிக்கணும். இதெல்லாம் அந்தக் காலத்துல இயல்பாகவே செய்யிறதுதான். இந்தக் காலத்து பெண்களுக்குத்தான் அதெல்லாம் பிடிக்க மாட்டேங்குதே..."

*

"பிரசவமான பெண்களுக்கு உணவுக் கட்டுப்பாடு ரொம்ப முக்கியம். வாயு பதார்த்தங்கள அறவே ஒதுக்கணும். நார்ச்சத்துள்ள பொருட்களையும் பழங்களையும் தவறாம உணவுல சேத்துக்கணும்.

*

எண்ணெயில வறுத்த பதார்த்தங்கள சேத்துக்கக் கூடாது. இப்ப உள்ள பொண்ணுக ரொம்ப பேருக்கு ஒரு கெட்டப்பழக்கம் இருக்கு.. பழைய முறைகள மறந்து எதுலயும் புதுமை புதுமைனு...இருக்குறாங்க.."

*

"காலயில ரொம்ப லேட்டா சாப்பிடறது.. இல்லயின்னா சாப்பிடறதே இல்ல... இது ரொம்ப தப்பு. கால சாப்பாடு கட்டாயம் சாப்பிடணும். இன்றைக்கு வயிறு தொப்பையா இருக்குறவங்கள்ல முக்கால்வாசிப் பேர் காலை டிபன் ஒழுங்கா சாப்பிடாததுதான் காரணம்னு கண்டு பிடிச்சிருக்காங்க.

*

பெண்களுக்கும் சரி, ஆண்களுக்கும் சரி.. காலை சாப்பாடு ரொம்ப முக்கியம். இல்லையின்னா கட்டாயம் தொப்பை விழும். ஏறத்தாழ பத்துமணி நேரம் வயிறு காலியா இருந்துட்டு, காலையிலயும் ஒண்ணும் சாப்பிடலேன்னா காலி இடத்துக்குள்ள காத்துதான் நிரம்பிக்கும். அப்பறமென்ன வயிறு தானா உப்பும்.

*

பிரசவம் ஆன பெண்கள் மேல உள்ள முறைகளையெல்லாம் கடைப்பிடிச்சா வயிறு உப்பாது. அப்பிடியும் உப்புனா குறிஞ்சா லேகியத்தச் சாப்பிடலாம். அது ஓரளவு வயிறு உப்புறத கட்டுப்படுத்தும்.. அதோட வயித்துல வரிவரியா கோடு விழறதையும் மாத்தும்."


***
thanks இணையம்
***

"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "