...

"வாழ்க வளமுடன்"

26 நவம்பர், 2010

நூறாண்டு காலம் வாழ்வது எப்படி?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
நூறாண்டு காலம் வாழுவதற்குரிய மந்திரம் எது ?



நீண்ட காலம் உடலை உயிருடன் வைத்திருக்க இரண்டு திசைகளே உள்ளன.


டேனிஸ் மக்களிடையே நூறாண்டு காலம் வாழ்வது எப்படியென்ற தேடல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அரசும் ஒவ்வொரு தேர்தலிலும் மூன்றாண்டு காலம் உங்கள் உயிர் வாழும் காலத்தை எமது ஆட்சி நீட்டிப்பு செய்யும் என்று பிரச்சாரம் செய்து வருகிறது.

*

50 இலட்சம் குடித்தொகை கொண்ட டென்மார்க்கில் தற்போது 867 பேர் நூறு வயதையும் தாண்டி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் 733 பேர் பெண்களாகும். டென்மார்க்கின் சராசரி இறப்பு வயது பெண்கள் 81 ஆகவும், ஆண்கள் 76 ஆகவும் உள்ளது.

*

ஆண்களை விட பெண்கள் அதிகமாக வாழ்வதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன, ஆனால் அனைத்திலுமே முக்கியமான காரணம் பெண்கள் மாற்றங்களை இலகுவாக ஏற்று அதற்கமைவாக வாழ்வதால் அவர்கள் ஆண்களை விட அதிக காலம் வாழ்கிறார்கள் என்று இது குறித்த ஆய்வில் ஈடுபட்ட பேராசிரியர் கெனிங் கியக் தெரிவித்துள்ளார்.

*

நூறாண்டு காலத்தை எட்டித் தொடும் பிரதான மந்திரமாக இது இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். நூறாண்டு வாழ மாற்றங்களை இயல்பாக ஏற்கப் பழகுங்கள்.

*

நூறு வயதை எட்டித் தொடும் முதியவர்களுடன் பேசுவது அவசியம். அவர்களுடைய கடந்தகால வாழ்க்கை, உணவு முறைகள் போன்றவற்றை கேட்டறிவது மற்றவர்களும் நீண்ட காலம் வாழுவதற்கு உதவும். ( இவர்கள் கிளம்ஸ்கள் என்று வயோதிபரை ஒதுக்கும் இளையோர் விரைவான சாவிற்கு வரவேற்புப் பாடுகிறார்கள் ) புவியில் வடக்கு – கிழக்கு – தெற்கு – மேற்கு என்று நான்கு திசைகளை பிரதானமாகக் கூறுவோம். ஆனால் நீண்ட காலம் உடலை உயிருடன் வைத்திருக்க இரண்டே இரண்டு திசைகள் மட்டுமே உள்ளன.

*

நாம் செய்யும் செயல் நீண்ட கால உயிர்வாழ்தலுக்கு எதிரான திசையிலும், சரியான திசையிலும் மட்டுமே இருக்கும். குறுங்கால உயிர் வாழும் திசைக்குள் பிரவேசித்தால் உடன் அதை நிறுத்தி சரியான திசைக்குள் திரும்பிவிட வேண்டும்.

*

ஒவ்வொரு செயலிலும் இந்த இரு திசைகளையும் பிரதானமாகக் கருதி உடனுக்குடன் மாற்றங்களை செய்ய வேண்டும். இல்லையேல் நீடித்த ஆயுளை எட்டித் தொட முடியாது. இதுதான் 100 வயதைத் தொடும் காந்த முள்ளாகும்.

***

மேலும் இளமையுடன் வாழ்வை நகர்த்த சில யோசனைகளையும், தந்துள்ளார்கள்:


1. மது, புகைத்தல் போன்ற பழக்கங்கள் இருந்தால் உடன் நிறுத்தி சரியான திசைக்கு வாழ்வை திருப்புங்கள்.

*

2. தினசரி 30 நிமிடங்கள் தேகப்பயிற்சி செய்யுங்கள்.

*

3. உடன்பாடு காண முடியாதவர்களை கைவிட்டு புதியவர்களுடன் இணைந்து புதுவாழ்வு காணுங்கள். பழையதையே நினைத்து கண்ணீர் விட வேண்டாம்.

*

4. சிறு பிள்ளைகளுடன் பழகி குழந்தை மனதோடு வாழுங்கள்.

*

5. புதிய மொழிகளை கற்றுக் கொள்ளுங்கள், மூளை புதுமைகளை விரும்பும்.

*

6. புதினங்களை அறியுங்கள் ஆனால் உணர்ச்சி வசப்பட வேண்டாம்.

*

7. ஆரோக்கிய வாழ்வு தொழில் போன்றவற்றில் உற்சாகமாக ஈடுபட வேண்டும்.

*

தற்போது 867 ஆக இருக்கும் 100 வயதைத் தொட்ட மனிதர் எண்ணிக்கையை எதிர்வரும் 2050 ல் 20.000 ஆக உயர்த்திவிட இப்போதே அரசு திட்டங்களை தீட்டியுள்ளது. இப்போது பிறக்கும் பிள்ளைகளில் இருவருக்கு ஒருவர் 100 வயதைத் தொடுவார்கள் என்றும் கணிப்பிடப்பட்டுள்ளது.

***

புலம் பெயர் தமிழருக்கான மேலதிக போனஸ் :

போர்கள் – கொடிய நோய் – வறுமை – சுகாதார சீர்கேடு – நல்ல உணவு இன்மை – தவறான அறிவு குறைந்த ஆட்சித்தலைமைகளும், அவர்களின் அடியாட்களும் அரசியலில் இருப்பது – தறவான இராணுவங்கள் – பிடிவாத குணம் கொண்ட மூர்க்க எண்ணங்கள் –


ஆயுத பாவனை – கொலை – கொள்ளை – கப்பம் – பேசித் தீர்க்க தெரியாத பாமரத்தனம் – கல்வியை இழந்த சமுதாயமாக இருப்பது – கல்வியை வாழ்விற்குள் கொண்டுவராமல் பணத்திற்காக வாழ்வது – சர்வாதிகாரத்திற்கு துணை போவது – தலைமை வழிபாடு – அறிவு குறைந்தோர் ஊடகங்களில் இருந்து வழிகாட்டுவது –


மக்களை கண்ணீர் வெள்ளத்தில் வைத்து பணம் பண்ணப் பார்ப்பது போன்ற பழக்கங்கள் மக்களின் ஆயுளைக் குறைக்கும் திசைப்பக்கமாக இருப்பதை நீண்ட காலம் வாழ விரும்புவோர் கவனத்தில் கொள்வது அவசியம்.



***
thanks அலைகள்
***



"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "