...

"வாழ்க வளமுடன்"

08 நவம்பர், 2010

இதயத்துக்கு நல்லதா - பாஸ்டுபுட் & உணவு.....

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
1. நமது சாப்பாடு காலையில் அதிகமாகவும், இரவில் குறைவாகவும் இருக்க வேண்டும்.




2. பசிக்கு பின் சாப்பிட வேண்டும்.

*

3. சாப்பாட்டுக்கு முன் பச்சைக் காய்கறிகளைச் (salad) சாப்பிட வேண்டும்.

*

4. வயிற்றைப் பட்டினி போடுவது தவறு. அதிகமாக சாப்பிடுவதும் தவறு.

*

5. சமைப்பதற்கு முன் இறைச்சியில் உள்ள கொழுப்பையும், கோழிக்கறியில் உள்ள தோலையும் நீக்கி சாப்பிட வேண்டும்.

*

6. கோதுமை, கம்பு போன்ற தானியங்களை மாவாக்கி பின்னர் சல்லடையால் சலிக்கக் கூடாது. அப்படிச் செய்வதால் ஊட்டச் சத்துக்களும் நார்சத்தும் குறைந்துவிடும்.

*

7. சமையல் எண்ணைகளை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தக் கூடாது.

*

8. உப்பு அதிகம் சேர்க்கக் கூடாது.

*

9. இரவு படுக்கைக்குப் போவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பாக சாப்பிட வேண்டும்.

*

10. பச்சைக் காய்கறிகள், பழங்கள் உங்கள் இதயத்தின் ஆயுளை அதிகாரிக்கும்.

*

11. வெப்பம், அதிக ஒளி, காற்று ஆகியவை அன்டி-ஆக்ஜிடென்ட் வைட்டமினுக்கு எதிரானவை, எனவே காய்கறிகளை நறுக்கி நீண்ட நேரம் திரந்து வைப்பதில் பலன் இல்லை. குக்காரில் காய்கறிகளை அவிப்பதால் சத்துக்கள் வெளியேறாது.

*

12. "·பாஸ்ட் புட்" சாப்பாடு, டின்களில் அடைக்கப்பட்ட உணவு ஆகிய இரண்டுமே உங்கள் பாக்கெட்டுக்கும் (பணம்) உங்கள் இதயத்துக்கும் நல்லதல்ல.

*

13. பொரித்த உணவை விட அவித்த உணவு மிகவும் நல்லது.

*

14. நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ சரியான நேரத்தில் சப்பிடவேண்டும், உணவில் காய்கறி, பழங்கள் அதிகமாகவும் கொழுப்புச்சத்து - உப்பு ஆகியவை குறைவாகவும் இருக்க வேண்டும்.

*

15. உயரத்திற்கு ஏற்ற எடை இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.


***

எடை கூடாமல் இருக்க:

1. தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

*

2. கொழுப்புச் சத்து, மாவுச்சத்து அதிகம் உள்ள உணவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

*

3. காப்பி, டீ அதிகம் குடிக்க கூடாது.

*

4. பச்சைக் காய்கறிகள், கிரை, பழங்கள் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

*

5. இனிப்பு, புளிப்பு உள்ள உணவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

*

6. தினமும் 30 முதல் 45 நிமுடம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.

*

7. பாஸ்ட்புட், சாக்லேட், ஐஸ்கிரீம் உள்ளிட்ட நொறுக்கு தீனி அதிகம் கூடாது.

***

உணவு உண்டவுடன் செய்ய கூடாதவை:


1. புகைப்பிடிக்காதீர்கள் - உணவு உண்டவுடன் புகைப்பிடிப்பது 10 மடங்கு புகைப்பிடிப்பதற்கு ஒப்பானது. (புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்)

*

2. உடனே பழங்களைச்சாப்பிடாதீர்கள் - பழங்களை உடனே சாப்பிடுவதால் வயிறு காற்று அடைத்து வீங்கிவிடும். சாப்பிட்டு 1-2 மணி நேரம் கழித்து பழங்கள் சாப்பிடவேண்டும் அல்லது சாப்பிடுவதற்கு 1 மணி நேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும்.

*

3. டீ குடிக்காதீர்கள் - சாப்பிடவுடன் டீ குடிக்காதீர்கள். டீயில் உள்ள அமிலத்தன்மை நாம் உண்ண உணவில் உள்ள புரத பொருளை கடின பொருளாக மாற்றிவிடும், அதனால் ஜீரணம் செய்வது கடினம்.

*

4. பெல்டை உடனே தளர்த்த வேண்டாம் - சாப்பிடவுடன் பெல்டை தளர்த்துவதால் சிறுங்குடல் அடைபடவோ அல்லது முறுக்கிக் கொள்ளவோ சந்தர்ப்பம் உள்ளது.

*

5. நடைப்பயிற்சி கூடாது - சாப்பிட்டவுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டால் ஜீரண உறுப்புக்களால் செரிமானம் செய்யப்பட்ட உணவுகளை கிரகித்துக் கொள்ள முடியாது.

*

6. குளிக்க வேண்டாம் - சாப்பிட்டவுடன் குளிப்பதால் கை, கால், உடல் பகுதிகளுக்கு ரத்த ஓட்டம் சென்றுவிடுவதால் ஜீரண உறுப்புகளுக்கு போதிய ரத்த ஓட்டம் இருக்காது. நாளைடைவில் ஜீரண உறுப்புக்கள் வழுவிழந்துவிடும்.

*

7. தூங்க வேண்டாம் - உண்டவுடன் படுக்கைக்கு செல்ல வேண்டாம். நாம் உண்ட உணவு சரியானமுறையில் செரிமானமாகாது.

***
thanks தினமணி & இணையம் .
***

"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "