...

"வாழ்க வளமுடன்"

01 செப்டம்பர், 2010

மாதவிலக்கு தள்ளிப்போவதை தடுக்க!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

மாதவிலக்கு என்பது பெண்களின் உடலில் உண்டாகும் கழிவு ரத்தத்தை மாதாமாதம் வெளியேற்றும் நிகழ்ச்சி ஆகும். ஒரு சில பெண்களுக்கு மாதத்தின் கடைசியில் தொடங்கி கடைசி வாரம் வரையிலும் தொடர்ந்து இருக்கும். இப்படி ஒழுங்காக நடந்துகொண்டு இருக்கும் நிலையில் ஒரு சில பெண்களுக்கு முறையாக 28 நாட்களில் வரவேண்டிய மாதவிலக்கு ஒன்றரை மாதம் அல்லது 2-3 மாதங்கள் வரை தள்ளிப்போகும்.


இந்த நிகழ்வுகள் அடிக்கடி ஏற்பட்டு கொண்டு இருந்தால் ஏதாவது கர்ப்பபை பிரச்சனை உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். இந்த நோய் வருவதற்கு முக்கிய காரணம் பெண்களின் உடலில் போதுமான ரத்தம் இல்லாததுதான் முதல் காரணம். குடும்பத்தில் உண்டாகும் பிரச்சனைகள், ஏற்படும் வெளியூர் பயணங்களால் நல்ல சத்துள்ள உணவுகளை சாப்பிடாமல் இருந்தாலும் இந்த பிரச்சனை ஏற்படும்.



எந்த நேரமும் நொறுக்கு தீனியை தின்றுகொண்டும், உணவுகளில் அதிக அளவு உப்பு கலந்த பொருட்களை சேர்த்து கொள்வதாலும்- அதிக அளவில் பிராய்லர் கோழிகளை சாப்பிட்டுவருவதும், பெண்களின் மாதவிலக்கு தள்ளிப்போக செய்யும் காரணங்கள். அதிக எடை கொண்ட பெண்களுக்கு 2 அல்லது 3 மாதங்கள் வரை மாதவிலக்கு தள்ளிப்போகும் போது அதை கவனிக்காமல் விட்டுவிட்டால் கருப்பையில் கோளாறுகள், கட்டிகள் தோன்றுவதை தவிர்க்க முடியாது.

இதை தவிர்க்க தினசரி உணவில் அதிக உப்பு சேர்த்துகொள்வது, தீனிகளை தவிர்க்கவேண்டும். மாறாக தினமும் சத்துள்ள காய்கறிகள், மாதுளம்பழம், ஆரஞ்சு, செவ்வாழை பழம் ஆகியவற்றை சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும். இதனால் மாதவிலக்கு பிரச்சினையை தவிர்க்கலாம்.


***

மூலிகை மருத்துவம் - தமிழ் மருத்துவம்.

http://doctors-corner-health-tips.blogspot.com/2010/04/blog-post.html#comment-form


***

"வாழ்க வளமுடன்"

2 comments:

Ahamed irshad சொன்னது…

பெண்களுக்கு உபயோகமானது...நல்ல பகிர்வு..

prabhadamu சொன்னது…

நன்றி அஹமது இர்ஷாத் நண்பரே உங்கள் வருகைக்கும் ஊக்கத்துக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா.

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "