...

"வாழ்க வளமுடன்"

04 மார்ச், 2010

பச்சை தேநீரின் (Green Tea ) / ( பசும் தேநீர்)

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இந்த கீரின் டீ ஒவ்வெரு நாட்டில் வேவ்வேறு முறையில் தயாறிக்கின்றனர்.







பசும் தேநீர் சீனாவில் தோன்றியது, பின்னர் ஜப்பானிலிருந்து மத்திய கிழக்கு வரையிலான ஆசியாவின் பல கலாச்சாரங்களுடனும் தொடர்புடையதானது. சமீபத்தில், இது கருப்புத் தேநீர் பாரம்பரியமாக அதிக அளவிற்கு அருந்தப்படுகின்ற மேற்கில் மிக அதிகமாகப் பரவியுள்ளது. பசும் தேநீரின் பல வகைகள் அது வளர்க்கப்படும் நாடுகளில் உருவாக்கப்படுகின்றன. இந்த வகைகள் பல்வேறு வளர்ப்பு நிலைகள், நிகழ்முறையாக்கங்கள் மற்றும் சாகுபடி காலம் ஆகியவற்றின் காரணமாக குறிப்பிடத்தகுந்த அளவிற்கு மாறுபடலாம்.



*


கடந்த பல பத்தாண்டுகளில் நீண்டகாலமாக சொல்லப்பட்டுவரும் அதனுடைய ஆரோக்கிய பலன்களை தீர்மானிப்பதற்கு பல அறிவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு பசும் தேநீர் உள்ளாகி வந்திருக்கிறது, தொடர்ந்து பசும் தேநீர் அருந்துபவர்களுக்கு இதய நோய் ஏற்படும் வாய்ப்புக்கள் குறைவாக இருப்பதாகவும், அவர்களிடத்தில் ஒரு குறிப்பிட்ட வகையிலான புற்றுநோய் ஏற்படுவதாகவும் சில ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன.




*


"எடை குறைப்பு நிகழ்முறைக்கு" பசுந் தேநீர் பயன்மிக்கதாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது - பப்மெட் போன்ற மருத்துவ தரவுத்தளத்தின் கூற்றுப்படி இது எந்தவிதமான மருத்துவ ஆதாரங்களும் இல்லாததாகும்.


***


தேயிலையாக தயாறிக்கும் முறை:




பொதுவாக 100 மில்லி தண்ணீருக்கு 2 கிராம் தேயிலை, அல்லது 5 அவுன்ஸ் கோப்பைக்கு (150 மில்லி)கிட்டத்தட்ட ஒரு தேக்கரண்டி பசும் தேயிலை பயன்படுத்தப்பட வேண்டும். ஜியோகுரு போன்ற உயர் தரமான தேநீர்களுக்கு இந்த அளவைக் காட்டிலும் அதிகப்படியான தேயிலை பயன்படுத்தப்பட வேண்டும் என்பதோடு குறுகிய காலத்தில் இந்த இலைகள் பல முறைகளுக்கு ஊறவைக்கப்பட வேண்டும்.



*


பசும் தேயிலை காய்ச்சப்படும் நேரம் மற்றும் வெப்பநிலை ஆகியவை தனிப்பட்ட தேநீர்களால் மாற்றமடைகின்றன. மிகவும் வெப்பமான தண்ணீர் காய்ச்சப்படும் வெப்பநிலைகள் 180 °F முதல் 190 °F (81 °C to 87 °C) வரை இருக்கிறது, நீண்டநேரம் ஊறவைக்கப்படும் நேரம் 2 முதல் 3 நிமிடங்கள் வரையிலுமாக இருக்கிறது. மிகவும் குளிர்ச்சியான காய்ச்சும் வெப்பநிலைகள் 140 °F முதல் 160 °F (61 °C to 69 °C) வரை இருக்கிறது, குறுகிய கால அளவு 30 நொடிகள். பொதுவாக, குறைந்த தரமுள்ள பசும் தேயிலைகள் வெப்பமாகவும் நீண்டநேரமும் ஊறவைக்கப்படுகின்றன, உயர் தரமுள்ள தேயிலைகள் குளிர்ச்சியாகவும் குறுகிய காலத்திற்கும் ஊறவைக்கப்படுகின்றன.



*



பசும் தேயிலையை அதிக வெப்பமாகவோ அல்லது நீண்ட நேரத்திற்கோ ஊறவைப்பது தரம் குறைவான இலைகளுக்கு கசப்பான, கடுகடுப்பு சுவைக்கு காரணமாகிறது. உயர் தரமுள்ள பசும் தேநீர்கள் பல்வேறு தடவைகளுக்கு ஊறவைக்கப்படுகின்றன; 2 அல்லது 3 முறைகளுக்கு ஊறவைத்தல் வகைமாதிரியானது. இந்த காய்ச்சும் உத்தியானது மிகையாக சமைக்கப்பட்ட சுவையை உருவாக்குவதை தவிர்ப்பதில் மிக முக்கியமான பங்காற்றுகிறது. முன்னுரிமையளிக்கும்விதமாக, தேநீர் ஊறவைக்கப்படும் கொள்கலன் அல்லது தேநீர்ப்பாத்திரம் முன்னதாகவே வெப்பமேற்றப்பட வேண்டும், இதனால் தேநீரானது உடனடியாக குளிர்ச்சியடைந்துவிடாது.



****



இத்தேனீரின் பயன்கள்:



1. பசும் தேநீர் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகக் கருதப்படும் பாலிஃபினாலைக் கொண்டிருக்கின்றன, குறிப்பாக எபிகேலோகேட்டசின் கேலட்டை ஏராளமாகக் கொண்டிருக்கும் கேட்டசின்கள்.


*



2. பசும் தேநீர் கார்டியோவாஸ்குலர் நோய் மற்றும் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது என்பதோடு எலும்பு அடர்த்தி, அறிவுச் செயல்பாடு, பற்சிதைவுகள் மற்றும் சிறுநீரகக் கல் போன்றவற்றிலும் பயன்மிக்க தாக்கத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிடுகின்றன.



*



3. பசும் தேநீர் காரோடெனாய்ட்ஸ், டோகோபெரோல்ஸ், அஸ்கார்பிக் அமிலம் (விட்டமின் சி), மற்றும் குரோமியம், மாங்கனிஸ், செலெனியம் அல்லது துத்தநாகம் போன்ற தாதுக்களையும் குறிப்பிட்ட பைத்தோகெமிக்கல் கலவைகளையும் கொண்டிருக்கின்றன. இது கருப்பு தேநீரைக் காட்டிலும் மிக அதிகமான ஆண்டியாக்ஸிடண்ட்கள் உள்ளது, இருப்பினும் கருப்புத் தேநீர்,[6] கொண்டிருக்கும் தியாஃபிளவின் போன்ற உட்பொருட்களை பசும் தேநீர் கொண்டிருப்பதில்லை.




*



4. கொள்ளைநோய்ப் பரவல் ஆய்வுகளில் குறைக்கப்பட்ட இதய நோயோடு பசும் தேநீர் அருந்துதல் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிகிறது.மிதமான தீவிர உடற்பயிற்சியின்போது பசும் தேநீர் உள்ளெடுப்பு கொழுப்பு ஆக்ஸிஜனேற்றத்தை மட்டும் அதிகரிக்கச் செய்வதில்லை, இது இளைஞர்களிடத்தில் இன்சுலின் உணர்திறன் மற்றும் குளுக்கோஸ் ஏற்பு ஆகியவற்றையும் மேம்படுத்துகிறது.



*



5. பசும் தேநீர் அருந்துவது இதய சுருங்கியக்க மற்றும் இதய விரிவியக்க இரத்த அழுத்தங்களைக் குறைப்பதாகவும், மொத்த கொழுப்பு அளவு, உடல் கொழுப்பு மற்றும் எடையை அதிகரிக்கச் செய்வதாகவும் இதன் முடிவுகள் காட்டுகின்றன. இந்த முடிவுகள் உருவாகிவிட்ட கார்டியோவாஸ்குலர் சாத்தியமுள்ள அபாயக் காரணிகளைக் குறைப்பதில் இதற்கு பங்கிருப்பதாக தெரிவிக்கின்றன.




*




6. மக்கள்தொகையினர் உடல் பருமனாகவும் அதிக அளவிற்கான கார்டியோவாஸ்குலர் அபாயமும் உள்ள அதிக எடையிள்ள மக்கள்தொகையினரிடத்தில் குறைப்புகள் மிகவும் குறிப்பிடத்தக்க பங்காற்றுகின்றன என்றும் இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது.



*



7. பெண்களின் உணவுப் பழக்கங்களிள் காளான்கள் மற்றும் பசும் தேநீரின் உண்பது மார்பகப் புற்றுநோய் 90 சதவிகிதம் வரை குறைவதோடு, மற்ற சத்துக்களும் தருகிறது.



*



8. கிரீன் டீ (Green Tea) ஒரு அற்புதமான தேநீர். இதை தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் உடம்பில் எந்த ஒரு நோயும் அண்டாது. முக்கியமாக கேன்செர் (Cancer), கொலஸ்டரால் (Cholesterol) இருதைய நோய் (Cardiac Deceases), நீரிழிவு அல்லது சர்க்கரை நோய் (Diabetics) . கிரீன் டீயில் இருக்கும் பாலிஃபீனால்ஸ் (Polyphenols) ஆன்டிஆக்ஸிடன்ட் (Antioxidant) உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கிறது. கிரீன் டீயில் பலவகை உள்ளது. அதில் ஜபநீஸ் கிரீன் டீ, சைனீஸ் கிரீன் டீ தான் மிகவும் பிரபலமானது. இன்று எல்லாக் கடைகளிலும் கிரீன் டீ கிடைக்கிறது.




*



9. முக்கால் வாசி போலியானவைகளே. கிரீன் டீ வாங்கும் பொழுது நல்ல தரமானதாக வாங்கவேண்டும் . வாங்கும் பொழுது ஆர்கானிக் கிரீன் டீ (Organic) வாங்குங்கள். டீயை ரொம்ப நாள் வைத்து இருந்தால் அதன் சுவை மாறி விடும். கொஞ்சம் கொஞ்சமாக வாங்க பழகி கொள்ளுகள். முன்பெல்லாம், இந்தியா (india), சீனா (china), ஜப்பான் (Japan), மற்றும் தைவான் (Taiwan) ஆகிய நாடுகள்தான் கிரீன் டீயை உற்பத்தி செய்தார்கள். தற்போது ஐரோப்பிய நாடுகளும் (European Countries) கிரீன் டீ உற்பத்தி செய்து வருகிறது.




*




10. கேமெலியா சினென்சிஸ் (Camellia sinensis) என்ற செடிகளில் இருந்துதான் கிரீன் டீ தயாரிக்கப்படுகிறது. கிரீன் டீ மிதமான சூட்டில் மாத்திரமே தயார் செய்யவேண்டும். அதிக சூட்டில் கிரீன் டீ தயாரித்தால் அதன் அசல் சுவை மாறிவிடும். அதிகபட்சம் இரண்டு நிமிடங்கள் போதுமானது. பொதுவாக கிரீன் டீ பருகுவதற்கு சுவையாக இருக்காதென ஒரு கருத்து நிலவுகிறது. உண்மைதான் ஆனால் சில நாட்கள் பழகிவிட்டால் அந்தச் சுவைகூடப் பிடித்துவிடும். பியர் (Beer), விஸ்கி (Whiskey) மற்றும் பிராந்தி (Brandy) போன்ற மதுபானங்கள் கூட குடிப்பதற்கு சுவையாகவா இருக்கிறது.




*



11. இந்த கிரீன் டீயில் வேண்டுமானால் கொழுப்புச் சத்து நீக்கப்பட்ட பாலை கொஞ்சம் கலந்தோ அல்லது சிறிது சர்க்கரை கலந்தோ ஆரம்பத்தில் பருகலாம். பிறகு முழுக்க முழுக்க ஏதும் கலக்காத கிரீன் டீயை பருகுவதே நல்லது. இன்றைய எந்திர யுகத்தில் நமது முகம், தோல் போன்றவை விரைவில் சுருக்கம் விழுந்து 5-6 ஆறு வயது அதிகமாகத் தெரிகிறதல்லவா?



*



12. அவற்றைப் போக்கி, அதாவது முன்கூட்டிய முதிர்ச்சியைப் போக்கி (Ante-Aging) இளமையாக இருப்பதற்கு இன்றைய வியாபார உலகத்தில் வந்திருக்கும் அழகு சாதனப்பொருட்களில் 90 சதம் கிரீன் டீ சேர்த்தே தயாரிக்கப்படுகிறது. அதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் (Anti-Oxidant) தோல் சுருக்கத்தைப் போக்குகிறது. வயிற்றுப் புண் (Ulcer) மற்றும் அமிலத்தன்மை பிரச்சினைகள் (Acidity) இருப்பவர்கள் கிரீன் டீயைத் தவிர்ப்பது நல்லது.



*



13. மற்றபடி இந்த கிரீன் டீயில் கஃபைன் (Caffeine) என்ற கெட்ட தாதுப்பொருள் குறைந்த சதவிகிதத்தில் உள்ளது. ஆனால் சாதாரணமாக நாம் அருந்தும் காஃபியில் (Coffee) இருக்கும் அளவைவிடக் குறைவாகவே உள்ளதாக ஆராய்ச்சிக் குறிப்பொன்று தெரிவிக்கிறது. எனவே இந்த கிரீன் டீயை (Green Tea) தைரியமாக நாம் அருந்தலாம்.



***



கீரின் டீயில் இவ்வளவு விஷயங்கலும், சத்துக்கலும் இருக்கிறது.



*


இனி கட்டாயம் தேடி பிடித்து குடிப்பீர்கள் தான!


***

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "