...

"வாழ்க வளமுடன்"

26 ஜனவரி, 2010

கல்யாண முருங்கைத் தோசை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
கல்யாண முருங்கை

இந்த இலையை சில ஊர்களில் முள்முருங்கை என்றும் சொல்லுவார்கள். இவை கொஞ்சம் கசப்பு சுவை கொண்டது.
சளியை முறித்து வெளியேற்றி நுரையீரலைப் பாதுகாக்கும் ஆற்றல் உள்ளது.
பெரியவர், சிறுவர் இருவரும் சாப்பிடலாம். சிறுவர்களுக்கு வெல்லம் சேர்த்து செய்து கொடுக்கலாம்.

தேவையான பொருட்கள்:

ஆய்ந்த இலைகள் - 20

பச்சரிசி மாவு - 250 கிராம்

மலைப்பூண்டு - 6 பல்

மிளகு தூள் - 1 தேக்கரண்டி

சீரகத்தூள் - 1 தேக்கரண்டி

தேங்காய்ப் பூ - 4 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 3

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:


1, பூண்டை மெல்லியதாக அரிந்து கொள்ளவும்.
2, பச்சை மிளகாய், முருங்கை இலையுடன் சேர்த்து மைய அரைக்கவும்.
3, ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, சீரகத்தூள், மிளகு தூள், தேங்காய்ப்பூ, உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
4, அதிலே அரைத்த விழுது, பூண்டு எல்லாம் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து,
5, அடுப்பில் தோசை கல் வைத்து தோசை ஊற்றவும்....

குறிப்பு:
எண்ணெய் வேண்டும் எனில் ஊற்றிக் கொள்ள‌வும்...

இவை "பலவகை நோய்களை விரட்டும் பச்சிலை சமையல்" என்ற நூலில் இருந்து எடுத்தது.

ஆசிரியர்; கந்தர்வகோட்டை ராஜேந்திரன்.
பதிப்பாசிரியர்; இராம.சீனிவாசன்.

6 comments:

அண்ணாமலையான் சொன்னது…

நன்றி..

prabhadamu சொன்னது…

நன்றி அண்ணா...

Jaleela Kamal சொன்னது…

ரொம்ப அருமையான தகவல், குறிப்பு மூலம் பகிர்ந்து கொண்டீர்கள்

prabhadamu சொன்னது…

நீங்கள் வந்து பதிவு போட்டது ரொம்ப மகிழ்ச்சி அக்கா. நன்றிக்கா....

Menaga Sathia சொன்னது…

நல்ல தகவலை குறிப்பு மூலம் எடுத்து சொல்லிருக்கிங்க.நன்றி ப்ரபாதாமு!!

நீங்கள் அறுசுவையில் வரும் பிரபாதாமுதானே?என் பக்கமும் வந்து பாருங்க...

prabhadamu சொன்னது…

நன்றிப்பா. நான் அந்த தளம் எப்பையும் பார்ப்ப்கும் தளம் தான் தோழி.

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "