...

"வாழ்க வளமுடன்"

16 ஜூன், 2011

தொப்பி ( கேப்) யை பற்றி சில உண்மைகள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


மன்னரின் முன்னிலையில் குடிமக்கள் யாரும் தொப்பி அணிந்திருக்கக்கூடாது என்பது இங்கிலாந்து நாட்டில் இன்று வரை இருந்துவரும் மரபாகும்.

*

இரண்டாம் சார்லஸ் இங்கிலாந்து மன்னராக இருந்த சமயம் ஒரு பள்ளிக்கூடத்தைப் பார்வையிடச் சென்றார்.

*

அந்தப் பள்ளியின் தலைவராக இருந்த டாக்டர் புஸ்பி என்பவர் இங்கிலாந்து நாட்டின் சிறந்த கல்விமான் என்று போற்றப்பட்டாவர். அவர் தலைமையில் உள்ள பள்ளியில் தரமான கல்விப் போதனை உண்டு என்ற நற்‌பெயர் இருந்தது.

*

தம்முடைய பள்ளியைப் பார்வையிட வந்த மன்னர் இரண்டாம் சார்லஸ் டாக்டர் புஸ்லி மிகுந்த வணக்கத்துடன் வரவேற்றார். பள்ளி முழுவதையும் சுற்றிக் காண்பி்த்தார்.

*

டாக்டர் புஸ்பி, மன்னருடன் இருந்த நேரம் வரை தனதுத் தொப்பியை அகற்றவே இல்லை. மரபை மீறித் தலையில் தொப்பி அணிந்திருந்தார்.

*

மன்னர் பள்ளியை விட்டுப் புறப்படும் முன், மரபை மீறி மன்னர் முன்னிலையில் தொப்பி அணிந்திருந்ததற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார் டாக்டர் புஸ்பி. பிறகு அதற்கான விளக்கத்தையும் சொன்னார்...

*

“மன்னர் அவர்களே.. தாங்களை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை. இந்த உலகத்தில் டாக்டர் புஸ்பியைவிட யாரும் உயர்ந்தவர்கள் இருக்க முடியாது என்று என்னுடைய மாணவர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் முன் நான் தொப்பியில்லாமல் காட்சியளித்தால் மாணவர்களிடம் என்னைப் பற்றிய மதிப்பும், மரியாதையும் குறைந்து விடும். ‌அதனால் தான் தங்கள் முன்னிலையில் நான் தொப்பியை எடுக்காமல் இருந்தேன்” என்றார்.

பின்பு அரசர் அவரைபாராட்டினார். இதுதாங்க நான் சொல்ல வந்ததது...


***


இன்னும் பிற உண்மைகள் :


தொப்பி (Hat) என்பது தலையில் அணியும் ஓர் ஆடையாகும். தொப்பிகளில் பல வகைகள் உள்ளன. ஆண்கள், பெண்கள் அணியும் தொப்பிகளில் வேறுபாடுகளும் உண்டு. வட்டம், நீள்வட்டம் என பல வடிவங்களில் தொப்பிகள் உள்ளன. அழகுக்காகவும், நிழலுக்காகவும், தூசு-மாசிலிருந்து காக்கவும் தொப்பிகள் பயன்படுகின்றன.

*

சில தகவல்கள் :

1. தொப்பி அணிந்தவர்களில் மிகவும் கம்பீனமானவர் சுபாஷ் ....


2. எம்.ஜி.ஆர் அவர்கள் வெள்ளை நிற தொப்பி அணிந்திருப்பார்.

3. முகமதிய நண்பர்கள் அவர்களது மத அடையாளமாக தொப்பி குல்லா அணிவார்கள்.

4.மொட்டை போட்டவர்கள், வெயில் அதிகமான காலத்தில் அணைவரும் தொ்பபி அணிவார்கள்.. :)


***
thanks கவிதை வீதி
***




"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "