...

"வாழ்க வளமுடன்"

22 ஜூன், 2011

இணைய தளம் மூலம் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தல்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


1. அகமதாபாத் 11. கோவா 21. மல்லாபுரம்

2. பெங்களூர் 12. கௌஹாத்தி 22. மும்பை

3. பரேய்லி 13. ஹைதராபாத் 23. நாக்பூர்

4. போபால் 14. ஜெய்ப்பூர் 24. பாட்னா

5. புவனேஷ்வர் 15. ஜலந்தர் 25. புனே

6. சண்டீகர் 16. ஜம்மு 26. ராய்ப்பூர்

7. சென்னை 17. கொல்கத்தா 27. ராஞ்சி

8. கொச்சி 18. கோழிக்கோடு 28. ஷிம்லா

9. டெல்லி 19. லக்னோ 29. ஸ்ரீநகர்

10. காஸியாபாத் 20. மதுரை 30. சூரத்

31. தாணே 32. திருச்சி 33. திருவனந்தபுரம் 34. விசாகப்பட்டினம்


***

பெங்களூருக்கு முதல் பக்கத்தைப் (ஹோம் பேஜ்) பார்த்துக் கொள்ளவும்.

இணைய தளம் மூலம் பதிவுசெய்வதற்கு (5.எக்ஸ் அல்லது அதற்கு மேலான) இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரைப் பயன்படுத்தவும்

1. புதிய பாஸ்போர்ட் பெறுவதற்கும் (ஏற்கனவே உங்களிடம் பாஸ்போர்ட் இருந்திருக்குமேயானால்), பாஸ்போர்ட்டைப் புதுப்பிப்பதற்கும் (10 வருடம் வரை செல்லக்கூடிய உங்களது பாஸ்போர்ட் காலாவதியாகி விட்டாலோ அடுத்த 12 மாதங்களுக்குள் காலாவதியாகும் நிலைமை ஏற்பட்டாலோ) மற்றும் நகல் பாஸ்போர்ட் பெறுவதற்கும் (உங்களது தற்போதைய பாஸ்போர்ட் தொலைந்துவிட்டாலோ அல்லது சேதமடைந்துவிட்டாலோ) நீங்கள் இணைய தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

2. அந்தந்த பாஸ்போர்ட் அலுவலகங்களின் சட்ட வரம்புக்குள் வரும் குடிமக்கள் மட்டுமே இணைய தளம் மூலமாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் தகுதி உடையவராவர்.

3. இந்த இணைய தளத்தின் மூலமாக, நீங்கள் உங்களுடைய பாஸ்போர்ட் விண்ணப்பத்தை உங்களது பாஸ்போர்ட் அலுவலகத்திடம் பதிவு செய்துகொள்ளலாம். பதிவு செய்தவுடன், உங்களது விண்ணப்பப் படிவத்தைச் சேமிக்க வேண்டுமா அல்லது திறக்க வேண்டுமா என்று உங்களிடம் கேட்கப்படும். தேவையானதைத் தேர்வு செய்தபின், தயவுசெய்து விண்ணப்பப் படிவத்தை அச்சிட்டுக்கொள்ளவும். (எந்தக் காரணத்தினாலோ விண்ணப்பப் படிவத்தை உங்களால் அச்சிட முடியாவிட்டால், அந்த விண்ணப்பப் படிவத்தின் வரிசை என்ணைக் குறித்துக்கொள்ளவும். இந்த வரிசை எண் மற்றும் பிறந்த தேதியின் உதவியுடன் விண்ணப்பப் படிவத்தை எப்போது வேண்டுமானாலும் அச்சிட்டுக்கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தை இணைய தளத்தில் சேமித்திருந்தீர்களேயானால், அதை எப்போது வேண்டுமானாலும் அச்சிட்டுக்கொள்ளலாம்.) விண்ணப்பப் படிவத்தில் இன்னும் காலியாக உள்ள சில இடங்களை நீங்கள் கையால் எழுதித்தான் பூர்த்தி செய்ய வேண்டும். உங்களுக்குக் கொடுக்கப்பட்ட நாளன்று குறித்த நேரத்தில் சம்பந்தப்பட்ட பாஸ்போர்ட் அலுவலகத்துக்குப் பிறந்த நாள் சான்றுதழ், ஆகிய ஆவணங்களுடன் நீங்களே நேரில் சென்று வேண்டிய கட்டணத்தைச் செலுத்தி பூர்த்தி செய்யப்ப ட்ட பாஸ்போர்ட் விண்ணப்பப் படிவத்தை அளிக்க வேண்டும். நீங்கள் பாஸ்போர்ட் அலுவலகத்துக்குச் செல்ல வேண்டிய நேரம்/தேதி ஆகியன உங்களுக்கு இணைய தளம் மூலமாகத் தெரிவிக்கப்படுவதுடன் உங்களுடைய விண்ணப்பப் படிவத்திலும் அச்சிடப்பட்டிருக்கும்.

4. உங்களுக்குக் கொடுக்கப்பட்ட நாள்/நேரத்தில் சம்பந்தப்பட்ட பாஸ்போர்ட் அலுவலகத்துக்குத் தவறாமல் செல்லவும். குறித்த நேரத்திற்குப் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்குச் சென்று உங்கள் கோப்பைக் கவனிக்கும் கவுண்ட்டருக்குச் செல்லவும். இணைய தளம் மூலமாக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்கும்போது டோக்கன் எண் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து சிரமப்பட வேண்டிய அவசியமும் இருக்காது.

5. இணைய தளம் மூலமாக உங்களுடைய பாஸ்போர்ட் விண்ணப்பத்தைப் பதிவுசெய்யும் முன்பு, உங்கள் பாஸ்போர்ட் அலுவலகத்தின் இணைய தள முகவரிக்குச் சென்று (பாஸ்போர்ட்.கௌவ்.இன்) அதில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களனைத்தையும் கவனமாகப் படிக்கவும். குறிப்பாக, கட்டண விவரங்கள், படிவம் எண்.1-ஐப் பூர்த்தி செய்ய உதவும் குறிப்புகள் மற்றும் 'எவ்வாறு விண்ணப்பிப்பது?' என்பது பற்றி நன்கு பார்த்துக் கொள்ளவும். இவற்றையெல்லாம் பார்த்தால், என்னென்ன ஆவணங்களின் நகல்கள் தேவை, விண்ணப்பங்களின் எத்தனை நகல்கள் தேவை, என்றெல்லாம் உங்களுக்குத் தெரியவரும். உங்களுக்குக் கொடுக்கப்படும் நாள்/நேரத்தில் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வந்து உங்களால் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க முடியும் என்று உறுதிபடத் தெரிந்தால் மட்டுமே இணைய தளம் மூலமாக விண் ணப்பியுங்கள்.
6. ஒருவேளை உங்களுக்குக் கொடுக்கப்பட்ட நாள்/நேரத்தில் சம்பந்தப்பட்ட பாஸ்போர்ட் அலுவலகத்துக்குச் செல்ல முடியாமல் சற்றுத் தாமதமாகச் செல்வீர்களேயானால், வரிசையில் நிற்பவர்கள் அனைவரையும் கவனித்துவிட்டு அன்றைய தினமே உங்களுக்கு சேவை அளிக்க எங்களால் முடிந்த அளவு நாங்கள் முயற்சி மேற்கொள்வோம்.

ஆதாரம்: https://passport.gov.in/pms/Information.jsp



***
thanks indg
***



"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "