...

"வாழ்க வளமுடன்"

16 மே, 2011

கட்டுவிரியன்(KRAIT). இதனை எண்ணெய் விரியன்,எட்டடிவிரியன் பாம்பு !!!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

நச்சுப்பாம்புகளில் நல்ல பாம்பின் விசம் பற்றிப்பார்த்தோம். நல்ல பாம்பின் விசமானது நரம்பு மண்டலத்தைத் தாக்கக் கூடியது என்பதையும் அதனால் தசைகள் செயலிழப்பு,மூச்சு விட முடியாமல் செயலிழந்து இறப்பு என்பதை அறிவோம்.


நல்ல பாம்பு போலவே நரம்புகளைத் தாக்கும் இன்னொரு வகைப்பாம்பு கட்டுவிரியன்(KRAIT). இதனை எண்ணெய் விரியன்,எட்டடிவிரியன் என்றும் சொல்லுவர். கட்டுவிரியன் உடலில் பொதுவாக வெண்ணிறப்பட்டைகள் காணப்படும்.
1.நல்ல பாம்பு, கட்டுவிரியன்-- நரம்புமண்டலத்தைத் தாக்குபவை.
2.கண்ணாடி விரியன்(RUSSELS VIPER), சுருட்டை விரியன்(SAWSCALED VIPER)-- இரண்டும் இரத்தத்தினை உறையவிடாமல் தடுப்பவை.


கண்ணாடி விரியன்,சுருட்டை விரியன்:

நல்ல பாம்பு போல் இவை அதிகம் ஆபத்துள்ளவை அல்ல.
1.கடிபட்டவர்களில் 50%க்கு சதவீதத்தினரை விசம் தாக்குவதில்லை.

2.25% த்தினருக்கு விசத்தின் அறிகுறிகள் தெரியும். ஆயினும் அனைவரும் இறப்பதில்லை.

3.கடிபட்ட 10 நிமிடத்தில் கடிவாய் சிவந்து வீங்கி விடும்.
15 நிமிடத்தில் கடிவாயில் இருந்து இரத்தம் கலந்த நீர் வடியத் துவங்கும். விசம் குறைவாக இருந்தால் வீக்கம் முழங்கை அல்லது முழங்காலுடன் நின்று விடும்.

4.விசம் குறிப்பிடத்தக்க அளவு உடலில் ஏறியிருப்பின் வலி,வாந்தி,வேர்வை,வயிற்றுவலி ஆகியவை இருக்கும். இரண்டு மணி நேரத்தில் மயக்கம் ஏற்படும். இவை அடுத்த 2 மணி நேரத்தில் சரியாகிவிடும்.இரு நாளில் வீக்கம் உடலில் பரவும். பொதுவாக நோயாளிகள் இரண்டு நாளில் குணமடைவர்.

5.கடி பலமாக இருந்தால் மயக்கம் அதிகம் இருக்கும். இரத்த சிவப்பணு, பிளேட்லெட்டுகள் குறையும். சிறு நீரில் இரத்தம்,சர்க்கரை, புரதம் வெளிப்படும். இரத்தம் உறையும் தனமை குறையும். பல் ஈறுகள், ஆசனவாய், கடிபட்ட இடம் ஆகியவற்றிலிருவ்து இரத்தக்கசிவு ஏற்படும்.சிறு நீரகம் செயலிழக்க ஆரம்பிக்கும். நுறையீரல் செயலிழத்தல், கண் பார்வை மங்குதல், தலைவலி, கடிவாய் புண் பொ¢தாகி, கடிபட்ட பகுதி பெரிதாக வீங்குதல் ஆகியவை இருக்கும். உடலுக்குள் இரத்தக்கசிவாலும், உடலுறுப்புகள் செயலிழப்பாலும் இறப்பு ஏற்படலாம்.


சிகிச்சைகள் முதல் பாகத்தில் தரப்பட்டுள்ளன. பாம்பு கடித்தால் என்ன ஏற்படும் என்று எளிமையாகத் தொ¢ந்து கொள்ளவே இந்தப்பதிவு. ஆகையினால் இதன் பயன் பற்றிக் கருத்துத் தெரிவிக்கவும்.

***
thanks தமிழ் துளி
***






"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "