...

"வாழ்க வளமுடன்"

31 மே, 2011

குசந்தைக்கு ஆரோக்கியமான தாய்பால் !!!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


பிரவசத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு பல சந்தேகங்கள் ஏற்படலாம் . அவற்றில் முக்கியமானது தாய்ப்பால் சுரப்பு எவ்வளவு இருக்கும்? என்பது. பொதுவாக குழந்தை பெற்றெடுத்த ஒரு ஆரோக்கியமான பெண்ணுக்கு சுமார் 850 மில்லி லிட்டர் தாய்ப்பால் தினமும் சுரக்கும்.

இந்த தாய்ப்பாலின் காரணமாக அந்த தாயானவள் தினமும் சுமார் 600 கலோரியை கூடுதலாக இழக்க வேண்டியது இருக்கிறது. சத்தான கீரை வகைகள், காய்கறிகள், பால், பழங்கள், புரதம் மிகுந்த பொருட்கள், நீர் போன்றவற்றை சரியான விகிதத்தில் அந்த தாயானவள் தொடர்ந்து எடுத்து வந்தால், அவளது தாய்ப்பால் சுரப்பால் ஏற்படுகின்ற கலோரி இழப்பு ஈடு செய்யப்படும்.

அதை தவிர்த்து, சத்து குறைவான உணவு வகைகள் அவளுக்கு கொடுக்கப்பட்டால் அவளது உடல் திறனும் பாதிக்கப்படும், தாய்ப்பால் சுரப்பும் குறைந்து விடும் குழந்தை பிறந்ததும் நாம் அதற்கு கொடுக்கும் முதல் உணவு தாய்ப்பால்தான் அந்த தாய்ப்பாலைக் காட்டிலும் மிகச்சிறந்த உணவு இந்த உலகில் வேறு எதுவும் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.

பிறந்த குழந்தை நோய் நொடியின்றி வளரத் தேவையான அனைத்து சத்துக்களும் இந்த தாய்ப்பாலில் உள்ளது. அதனால்தான், எல்லா தாய்மார்களையும் குழந்தைகளுக்கு கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

இந்த தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராது என்கிறது ஒரு ஆய்வு.தாய்ப்பால் மூலம், குழந்தைக்கு தேவையான கொழுப்புச்சத்து சரிவிகித அளவில் கிடைப்பதுதான் அதற்கு முக்கிய காரணம் என்கிறார்கள் அந்த ஆய்வை மேற்கொண்டவர்கள்.

மேலும், முறையாக தாய்ப்பால் குடித்து வளராத குழந்தைகளுக்கு இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள். தாய்ப்பால் கொடுத்தால் அழகு கெட்டுவிடும் என்றெல்லாம் கர்ப்பனை செய்துகொள்ளும் சில தாய்மார்கள், அந்த எண்ணத்தில் இருந்து தங்களை இனியாவது மாற்றிக்கொள்வதுதான் நல்லது.


***
thanks varunan
***






"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "