...

"வாழ்க வளமுடன்"

08 ஏப்ரல், 2011

நீண்ட நேரம் கணிணி முன் அமர்ந்து வேலை செய்பவருக்கு ரிலாக்ஸ் டிப்ஸ் !!!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

*



*



*



*



*


*** நீண்ட நேரம் கணிணி முன் அமர சரியான முறை..! உங்களுக்கு நீண்ட நேரம் 'பொட்டிதட்டும்' வேலையாலோ... அல்லது 'ஒரு பரபரப்பு பதிவு' போட்டுவிட்டு அதற்கு எவரேனும் பின்னூட்டமிடுகிறாரா... என எந்நேரமும்...'கணிணித்திரையும் கண்ணுமாய்' காத்திருந்து, பின்னூட்டமிட்டவர்களிடம் 'விசைப்பலகையும் விரல்களுமாய்' கடுமையான விவாதம் புரிவதாலோ... கண் பார்வை பிரச்சினை, முதுகு வலி, தோள் புஜம் நோவு, முழங்கால் வலி, மணிக்கட்டு வீக்கம், பாதச்சோர்வு, தசைப்பிடிப்பு, தலைவலி, இடுப்புவலி ...( ..போதும்... போதும்... என்கிறீர்களா..? ) ...சரி, இதெல்லாம் வராமல் இருக்க... அல்லது தாமதமாக வர...(!?) அல்லது வந்த வலி குறைய... வேண்டுமானால், பின்வரும் ஆலோசனைகளை செயல்படுத்தி பாருங்களேன்..! 1# கணிப்பொறியின் திரையை பார்வை மட்டத்திலும் பார்வைக்கு நேர்க்கோட்டிலும் அமைக்க வேண்டும்.

*

2# திரைக்கும் உங்கள் கண்களுக்கும் இடையேயான தூரம் 16"-ஆக இருக்க வேண்டும்.

*

3# சி.பி.யு. வை கை எட்டும் தூரத்தில் வைக்கும் அதேநேரம் திரை அமைந்திருக்கும் மேசை மேல் வைக்காமல் வலப்பக்கம் மேசைக்கு கீழே வைக்கவேண்டும். ( இது வலது கை பழக்கம் உள்ளவர்களுக்கு ; இடது கை பழக்கம் உள்ளவர்கள் இடப்பக்கம் வைக்கலாம் )

*

4# உங்கள் முழங்கால்கள் மேசைக்கு கீழே வசதியாக அமையுமாறு மேசை உயரம் இருத்தல் அவசியம். அல்லது அதற்குத்தகுந்த உயரத்துக்கு உங்கள் நாற்காலியை உயர்த்தியோ தாழ்த்தியோ கொள்ள வேண்டும். கால்களை தொங்க விடாமல் ( பாதத்தின் விரல்கள் பாகம் உயர்ந்தும் குதிகால் பாகம் தாழ்ந்தும் உள்ள ) ஏதாவது ஒரு நிலையான கட்டையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

*

5# விசைப்பலகை, நாற்காலியின் கைப்பிடியால் முட்டுக்கொடுக்கப்பட்ட முழங்கைக்கு கீழ்மட்டத்திலும் அதன்மூலம் தோள்களுக்கு அழுத்தம் தராத வகையிலும் இருத்தல் வேண்டும்.

*

6# விசைப்பலைகையின் முன் புறம் சற்று தூக்கி இருக்கும் படி அமைத்துக்கொள்ள வேண்டும்.

*

7# முழங்கை கோணம் தோராயமாக 90° இருக்கும்படி அமைத்து, மணிக்கட்டுகள் முழங்கைக்கு கிடைமட்டமாக அமையுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

*

8# 'மவுசை' (இதற்கு என்ன தமிழ்ப்பெயர்?) விசைப்பலகை மட்டத்திலே அதற்கு முடிந்தவரை நெருக்கமாக வைக்கவேண்டும்.

*

9# முதுகுவலி அவஸ்தை வராமல் இருக்க, எப்போதுமே முதுகை கணிப்பொறி இயக்கத்திற்கென்றே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சுழல் நாற்காலியுடன் ஒட்டி சாய்த்து அதே நேரம் முதுகு வளையாமல் செங்குத்தாக இருக்கும் படி அமர வேண்டும்.

*

10# ஒருமுறை இந்த அமர்வில் இருந்து எழுந்துவிட்டால், உடனே மீண்டும் அமர்ந்துவிடாமல், (சிறுது நேரம் நின்றுவிட்டோ, ஒரு சிறு உலா போய்விட்டோ...) அடுத்த அமர்விற்கு குறைந்தது 20 வினாடிகளிலிருந்து 2 நிமிடங்கள் வரை இடைவெளி விட்டு மீண்டும் அமர்தல் நல்லது. *** நன்றி முஹம்மத் ஆஷிக்,ugine நன்றி Mohamed ***

"வாழ்க வளமுடன்"


2 comments:

பெயரில்லா சொன்னது…

ஒரு நாளுக்கு 10 மணி நேரம் கணனியில் இருக்கின்றேன். எனக்கு மிகவும் தேவையான தகவல்கள் .............

prabhadamu சொன்னது…

//// இக்பால் செல்வன் கூறியது...
ஒரு நாளுக்கு 10 மணி நேரம் கணனியில் இருக்கின்றேன். எனக்கு மிகவும் தேவையான தகவல்கள் .............
////



நன்றி இக்பால் செல்வன்.


உங்கள் போன்னா நேரத்தை ஆழ்கடலுக்கு சொலவிட்டதுக்கு மிக்க நன்றி :)

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "