...

"வாழ்க வளமுடன்"

19 ஏப்ரல், 2011

குழந்தைக்கு வயிர்ருப்போக்கும் சிகிச்சைகளும் !!!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தினமும் திட நிலையில் வெளியேறும் மலம் திடீரென்று நீர்த்த நிலையிலோ, தண்ணீராகவோ ஒருநாளைக்கு மூன்று முறைக்கு மேல் வெளியானால் அதை பேதி என்று சொல்வார்கள். அந்தச் சமயத்தில், மலம் எத்தனை தடவை வெளியேறுகிறது என்பதைவிட, மலத்தின் தன்மை மாறி ஏன் தண்ணீராகப் போகிறது என்பதற்கான காரணத்தைத் தெரிந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். பதினான்கு நாள்களுக்கு மேல் பேதி தொடர்ந்து இருந்தால் அதற்கு தொடர் பேதி (Persistant Diarrhea) என்று சொல்வார்கள். பேதியோடு, மலத்தில் ரத்தமும் சீழும் கலந்து வெளியேறுதல், காய்ச்சல், வயிற்று வலி போன்றவை இருந்தால் அதை அக்யூட் டிசென்டரி என்று சொல்வார்கள். *** பேதிக்கான காரணம் * ரோட்டா வைரஸ் * ஈ கோலி பேக்டீரியா * காலரா * சிகெல்லா * சால்மோனல்லா * காம்பெல்லோ பாக்டீரியா போன்ற நுண்கிருமிகளால் பேதி ஏற்படலாம். *** அறிகுறிகளும், பாதிப்புகளும் * உடலில் இருந்து அதிக அளவில் நீர் உப்புகள், வைட்டமின்கள் வெளியேறுகின்றன. * சத்துக் குறைபாடு ஏற்படும். * உணவில் இருந்து மைக்ரோ மற்றும் மேக்ரோ நுணூட்டச் சத்துகளை திசுக்கள் உறிஞ்ச முடியாமல் போகும். * புரோட்டின் சத்தும் வீணாகும். * பசி எடுக்காது. * ரத்த அளவு குறையும். * நாடித் துடிப்பும் குறையும். * ரத்த அழுத்தம் குறையும். * கை, கால்கள் சில்லிட்டுப் போகும். * வெளியேறும் சிறுநீரின் அளவு குறையும். * சிறுநீரகம் பாதிக்கப்படும். *ரத்ததில் பொட்டாசியம் அளவு குறைவதால் வயிறு வீக்கம், குடல் வேலை செய்யாத நிலை ஏற்படும். * பைகார்பனேட் வெளியேறுவதால், அசிடிமியா (Acidemia) பிரச்னை ஏற்பட்டு மூச்சுவிடுவதல் வேகமாகவும், ஆழமாகவும் இருக்கும். *** பரிசோதிக்கும் முறைகள் 1. பேதியால் பாதிக்கப்ட்ட குழந்தைகளைப் பரிசோதித்து, உடலில் இருந்து நீர் மற்றும் உப்புச் சத்துகள் மிகவும் அதிகமாகக் குறைந்துள்ளதா, மிதமாகக் குறைந்துள்ளதா, குறையவில்லையா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். குழந்தை சோர்வாக இருத்தல் அல்லது மயக்கம் அடைதல், குழி விழுந்த கண்கள், வயிற்றுப் பகுதி தோலை இழத்துவிட்டால், மிக மெதுவாகப் பழைய நிலையை அடைதல் போன்ற அறிகுறிகள் இருந்தால், நீர் மற்றும் உப்புச் சத்துகள் மிகவும் அதிகமாகக் குறைந்துள்ளது என்று அர்த்தம். * 2. குழந்தை நன்றாக விளையாடிக் கொண்டிருத்தல், கண்கள் குழி விழாமல் இருத்தல், வயிற்றுப் பகுதி தோலை இழுத்துவிட்டால், உடனே பழைய நிலைக்குத் திரும்புதல் போன்ற அறிகுறிகள் இருந்தால், நீர் மற்றும் உப்புச் சத்துகள் குறையவில்லை என்று அர்த்தம். * சிகிச்சைகள் பேதியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மூன்று வகைகளாகப் பிரித்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்க வேண்டும். சிகிச்சை முறை (நீர் குறையாத குழந்தைகளுக்கானது) திரவ உணவை அதிகமாகக் கொடுக்க வேண்டும். தாய்ப்பால் தொடர்ந்து கொடுக்க வேண்டும். தாய்ப்பால் குடிக்காத குழந்தைகளுக்கு அரிசிக் கஞ்சி, மோர், எலுமிச்சைச் சாறு, இளநீர், பருப்பு நீர்,பால், காய்கறி சூப் ஆகியவற்றைக் கொடுக்கலாம். வழக்கமாக கொடுக்கும் திரவ உணவுடன், ஒவ்வொருதடவை பேதி ஆகும்போதும் கீழ்க்கண்ட அளவு நீகீகு எனப்படும் உப்பு & சர்க்கரைக் கரைசல் கொடுக்கவேண்டும். இரண்டு வயதுக்கு உள்பட்ட குழந்தைக்கு 50 மில்லி & 100 மில்லி இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைக்கு 100 மில்லி & 200 மில்லி. *** தாய்மார்களுக்கான அறிவுரை 1. ORS திரவத்தை கரண்டி அல்லது பாலாடையில் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுக்க வேண்டும். 2. குழந்தை வாந்தி எடுத்தால் பத்து நிமிடங்களுக்குப் பிறகு ளிஸிஷி திரவத்தை மீண்டும் கொடுக்க வேண்டும். 3. பேதி நிற்கும் வரை ளிஸிஷி திரவத்தையும், பிற திர உணவுகளையும் கொடுக்க வேண்டும். சிகிச்சை முறை (மிதமான நீர் குறைந்த குழந்தைகளுக்கானது) ORS திரவத்தை வயதுக்கும் எடைக்கும் ஏற்ப கொடுக்க வேண்டும். முதல் நான்கு மணி நேரத்துக்குள் கொடுக்க வேண்டும். கொடுக்க வேண்டிய அளவு * பிறந்து 4 மாதங்களும், 6 கிலோ எடையும் உள்ள குழந்தைக்கு 200 மில்லி & 400 மில்லி. * 4 முதல் 12 மாதமும், 6 முதல் 10 கிலோ எடையும் உள்ள குழந்தைக்கு 400 மில்லி & 700 மில்லி * ஒன்று முதல் இரண்டு வயது வரையும் 10 முதல் 12 கிலோ எடையும் உள்ள குழந்தைக்கு 700 மில்லி & 900 மில்லி. * இரண்டு முதல் ஐந்து வயது வரையும் 12 முதல் 19 கிலோ எடையும் உள்ள குழந்தைக்கு 900 மில்லி & 1400 மில்லி. நான்கு மணி நேரத்துக்குப் பிறகு குழந்தையின் நிலையை மீண்டும் பரிசோதித்து அப்போதைய நிலைக்கு ஏற்பட சிகிச்சை அளிக்க வேண்டும். குழந்தைக்குத் தாய்ப்பால் தொடர்ந்து கொடுக்க வேண்டும். சிகிச்சை முறை (மிகவும் அதிக அளவு நீர் குறைந்த குழந்தைகளுக்கானது) குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்குக் கொடு சென்று, ரிங்கர் லாக்டேட் என்ற மருந்து நீரை உடலில் ஏற்ற வேண்டும். மிகவும் அதிக அளவு சத்துகள் குறையாமல் தடுக்க கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். * எப்போதும் சாப்பிடுவதற்கு முன் கை, கால்களைக் கழுவ வேண்டும். * கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரைத் தான் குடிக்க வேண்டும். * திறந்த வெளியில் கொசுக்களோ, ஈக்களோ மொய்த்த உணவுப் பொருள்களைச் சாப்பிடக்கூடாது. * சூடு ஆறிய உணவைச் சாப்பிடக்கூடாது. * பழைய, கெட்டுப்போன உணவைச் சாப்பிடக்கூடாது. * டின்னில் அடைக்கப்பட்டுக் கிடைக்கும் உணவுப் பொருள்களைச் சாப்பிடக்கூடாது. *** நன்றி-தினகரன் *** "வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "