...

"வாழ்க வளமுடன்"

18 ஏப்ரல், 2011

அயிரை மீன் குழம்பு!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ன் குழம்புகளில் அயிரை மீன் ருசியை அடித்துக் கொள்ள எதுவும் கிடையாது. உருவத்தில் சிறியதான அயிரை சமைக்க எளிதானது. ருசியில் மேலானது. மற்ற மீன்களைப்போல தலை, குடல்களை பக்குவம் செய்ய படாதபாடு பட வேண்டாம். லேசாக கிள்ளினாலே மீன் தலை நீக்கப்பட்டு சமைக்கும் பக்குவத்துக்கு வந்துவிடும். ஒரு வீட்டில் சமைத்தால் அந்த தெருவையே மணமணக்க வைத்து கிராமிய மணம் பரப்பும் பெருமையும் அயிரை மீனுக்கு உண்டு. *** அயிரை மீன் குழம்பு அதேபோல அசைவத்தில் எலும்பு, கொழுப்பு, குடல் என்று ஒதுக்கிவிட்டு சாப்பிடுபவர்கள் இருந்தாலும் ஈரலை வெறுப்பவர்கள் இருக்க மாட்டார்கள். சில சத்துக்களுக்கு இன்றியமையாததான ஈரலை வறுவல் செய்து ருசிக்கவும் இந்த வாரம் கற்றுக்கொள்வோம். தேவையான பொருட்கள் அயிரை மீன் – 1/2 கிலோ வெங்காயம் – 200 கிராம் தக்காளி – 200 கிராம் புளி – எலுமிச்சம் பழ அளவு மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன் தனியாத்தூள் – 2 டீஸ்பூன் மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன் பூண்டு – 6 பல் உப்பு – தேவையான அளவு எண்ணை – 1/2 குழிக்கரண்டி கடுகு – சிறிதளவு கறிவேப்பிலை – சிறிதளவு ** செய்முறை * மீனைச் சுத்தம் செய்து கொள்ளவும். * புளியைக் கரைத்து வடிகட்டி, அதில் மிளகாய்த் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும். * வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். * நறுக்கிய வெங்காயம், தக்காளி இவை சேர்த்து வதக்கவும். * தொடர்ந்து தட்டிய பூண்டைச் சேர்த்து நன்கு வதக்கவும். * இப்போது கரைத்த புளிக்கரைசல், மசாலா இவை சேர்த்து ஊற்றி கொதிக்க விடவும். * மசாலா கலவை கொதித்ததும், மீனைப்போட்டு குறைந்த தீயில் சிறிது நேரம் வைத்திருந்து இறக்கவும். * சுவையான அயிரை மீன் குழம்பு மணக்க மணக்க தயார். *** thanks செப்’ தாமு *** "வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "