...

"வாழ்க வளமுடன்"

16 பிப்ரவரி, 2011

மலச்சிக்கல் ஏற்படுவதின் காரணங்களும் தீர்வுகளும்!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


மலச்சிக்கலில் தொடங்கி மருத்துவமனை வரை:

மனிதனின் உடல் உறுப்புகள் வெவ்வேறு விதமான கழிவுகளை உண்டாக்கினாலும், ஆபத்தான கழிவுப்பொருள் மலம் மட்டுமே.
வியாதிகளின் தொடக்கம் மலச்சிக்கல் என்பதில் சந்தேகமே இல்லை. மலம் கெட்டிப்பட்டு உள்ளேயே தங்கிவிட்டால் மலம் நஞ்சாக மாறிவிடுகிறது.


சிக்கல் இல்லாதவருடைய மலம் எவ்வாறு இருக்கும் என்பதற்கு சில குறிப்புகள் உள்ளன. அவற்றை நன்றாக உள்வாங்கிக்கொள்ள வேண்டும். அதிகாலையில் எழுந்தவுடன் சில நிமிடங்களுக்குள் மலம் கழிய வேண்டும். ஓரிரு நிமிட வேலையாக அது முடிந்துவிட வேண்டும். பெரும் முயற்சி இருத்தல் கூடாது.


மலம் உடம்பில் இருந்து ஒரே கயிற்றுத்திரிபோல் சுழன்று வந்து விழவேண்டும். வெளித்தள்ளுவதற்கு அதிக அழுத்தமோ, முயற்சியோ இருத்தல் கூடாது. மலத்தின்மீது சளிபோன்ற ஒரு படலம் இருத்தல் வேண்டும். மாட்டுச்சாணத்தில் இதுபோன்ற சளிப்படலத்தை பார்க்கலாம்.


மலத்தில் துர்நாற்றம் இருத்தல் கூடாது. மலம் நீங்கும்போது உண்ட உணவிற்கு இருந்த மணம் உணரப்படுவது சிறந்தது. மூன்று வேளைகளும் பழங்களையே உண்டு வாழ்வோருக்கு இந்த அனுபவம் கிட்டும். எத்தனை வேளை உணவு உண்கிறோமோ, அத்தனை முறைகள் மலம் கழிய வேண்டும். மலம் கழிந்தவுடன் வயிறு காலியான உணர்வும், சோம்பல் நீங்கிய சுறுசுறுப்பும், வேலை செய்ய தகுதியான உடல்நிலையும் அனுபவப்படவேண்டும்.


மலம் கழித்த சிறிது நேரங்கழித்து மீண்டும் வரும்படியாக உள்ளே தங்கி இருத்தல் கூடாது. மலத்தின் நுனி கூராக வந்து முடிந்தால் இனி மலம் இல்லையென்று பொருள். கால் கழுவ வேண்டிய அவசியம் இல்லாமலும், பசைபோல் ஒட்டும் தன்மை இல்லாமலும் இருத்தல் வேண்டும். மலம் கழிக்கும்போதோ, முன்போ, பின்போ, வயிறு வலிக்கக்கூடாது. மலத்துவாரத்தில் எரிச்சலும், அரிப்பும் ஏற்படக்கூடாது.

by -மு.குருமூர்த்தி


***
தீர்வுகள் :

1.நமது செரிமானம் வாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் என்று நான்கு நிலைகளில் செயல்படுகிறது. இதில் எந்த நிலையில் தடை ஏற்பட்டாலும் மலச்சிக்கல் ஏற்படும். ஆகவே, செரிமானம் நன்கு நடைபெறும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

*

2. போதிய அளவு நீர் குடிக்காததால் மலச்சிக்கல் ஏற்படும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 2 அல்லது 3 கோப்பைகள் நீர் அருந்த வேண்டும். நீரில் எலுமிச்சை சாறு கலந்தும் குடிக்கலாம். சிலர் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுவர். இது சரியல்ல. அதிக அளவு நீர் குடித்தால் சிறுநீரகங்களின் வேலை அதிகமாகி பாதிப்பு ஏற்படலாம்.

*

3. நாம் உண்ணும் உணவில் நார்ச்சத்து குறைவாக இருந்தால், மலச்சிக்கல் ஏற்படும். வெள்ளை ரொட்டி, கேக், பிஸ்கட், ஜாம், க்ரீம், துரித உணவுகள், டின்களில் பாதுகாக்கப்பட்ட உணவுகள் இவை மலச்சிக்கலை ஏற்படுத்தும். கீரைகள், காய்கறிகள், பழங்கள் இவற்றில் நார்ச்சத்துகள் அதிகம் உள்ளன.

*

4. வேலை தொந்தரவினால் மலம் கழிக்கும் உந்துதல் வரும்போது சிலர் அதை அடக்கி வைத்துக் கொள்வர். இதனால், மலம் உள்ளுக்குள் தள்ளப்பட்டு சிக்கலை உருவாக்குகிறது. காலையில் எழுந்ததும் நமது காலைக் கடன்களில் மலம் கழித்தலை முக்கிய கடமையாக நினைத்துச் செயல்பட வேண்டும்.

*

5. வயதானவர்களுக்கும், போதிய உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும் மலச்சிக்கல் ஏற்படும். வயதானவர்கள் அதிக சத்துள்ள உணவுகள், காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்துள்ள உணவுகள் இவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். அவரவர் வயதிற்கேற்ப காலையில் சுமார் அரைமணி நேரமாவது எளிய உடற்பயிற்சிகள் செய்யலாம். நடைப்பயிற்சி செய்யலாம்.

*

6. பெருங்குடல், சிறுகுடல் பகுதிகள் பாதிக்கப்பட்டால் அல்லது அடைப்புகள் ஏற்பட்டால் மலம் கழித்தல் சிரமமாக இருக்கும். இந்த அடைப்புகளை நீக்க மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

*

7. மலச்சிக்கல் ஏற்பட்டால் சிலர் உடனே மலமிளக்கி மருந்துகளை நாடுவர். இம்மருந்துகள் சில நாட்களுக்குத்தான் பலன் தரும். பிறகு மருந்துகளின் அளவை அதிகரிக்க வேண்டிவரும். இம்மருந்துகளால் குடல் பலவீனமடைகிறது.


உடலில் வைட்டமின் சத்துக்களை உட்கிரகிக்கும் சக்தி குறைந்துவிடும். ஆகவே, இம்மருந்துகளைத் தவிர்த்து இயற்கையான முறைகளைப் பின்பற்ற வேண்டும். மருந்திற்குப் பதில் இவர்கள் எனிமா எடுத்துக்கொள்ளலாம்.


இயற்கை வைத்தியத்தில் உபயோகிக்கும் எளிமையான எனிமா கருவி ‘காதிபவன்’ கடைகளில் கிடைக்கும். சில நாட்களுக்கு எனிமா எடுத்துக்கொண்டால் பிறகு இயற்கையாகவே மலம் கழிக்கும் பழக்கம் வந்துவிடும்.


***




***
thanlks google & குருமூர்த்தி

***


"வாழ்க வளமுடன்"


இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "