...

"வாழ்க வளமுடன்"

12 ஜனவரி, 2011

பொன்மொழிகள் :)

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


பேசும்முன் கேளுங்கள்,
எழுதுமுன் யோசியுங்கள்,
செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்.

*

என்னால் முடியும் என்பது
தன்னம்பிக்கை.
என்னால் மட்டுமே முடியும் என்பது
அகம்பாவம்

*

கற்றுக்கொள்ள வேண்டுமா? முதலில் அறிந்ததை சொல்லிக்கொடு!! கற்றுக்கொள்வாய்!!!
பெற்றுக்கொள்ள வேண்டுமா? முதலில் முடிந்ததை அள்ளிக்கொடு!! பெற்றுக்கொள்வாய்!!!

*

முயலும் வெல்லும்!
ஆமையும் வெல்லும்!!
முயலாமை வெல்லாது!!!

*

எவரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்;
எதிர்பார்த்தால் இறுதிவரை
எதையும் சாதிக்காமலே போய் விடுவீர்கள்!

*



ஓடத் தொடங்குமுன்
நடக்க பழகிக்கொள்வோம்.

*

ஆசையில்லாத முயற்சியால்
பயனில்லை.
முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

*

தோழர்களே!
பயணம் போவோம்!
நாட்களை நம்பியல்ல,
நம்மிரு தோள்களை நம்பி!

*

நண்பனே!
நாளைய மழை அறியும் எறும்பாய் இரு
நேற்றைய மழைக்கு இன்று குடை பிடிக்கும்
காளானாய் இராதே!

*

பத்து ஆண்டுகளின் அருமை தெரிய வேண்டுமா?
புதிதாக விவாகரத்து ஆன தம்பதியிடம் கேளுங்கள்.

*

ஒரு ஆண்டின் அருமை தெரிய வேண்டுமா?
இறுதித் தேர்வில் தோல்வியடைந்த மாணவனைக் கேளுங்கள்.

*

ஒரு மாதத்தின் அருமை தெரிய வேண்டுமா?
குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தையின் தாயைக் கேளுங்கள்.

*

ஒரு வாரத்தின் அருமை தெரிய வேண்டுமா?
வாராந்திர பத்திரிகையின் ஆசிரியரைக் கேளுங்கள்.

*

ஒரு மணியின் அருமை தெரிய வேண்டுமா?
காத்திருக்கும் காதலர்களைக் கேளுங்கள்.

*

ஒரு நிமிடத்தின் அருமை தெரிய வேண்டுமா?
விமானம், ரயில் அல்லது பஸ்ஸை தவற விட்டவர்களைக் கேளுங்கள்.

*

ஒரு நொடியின் அருமை தெரிய வேண்டுமா?
விபத்தில் உயிர் தப்பியவரைக் கேளுங்கள்.

*

ஒரு மில்லி-நொடியின் அருமை தெரிய வேண்டுமா?
ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரைக் கேளுங்கள்.

*

காலம் பொன்னானது.
ஒவ்வொரு நொடியையும் பொக்கிஷமாகப் போற்றுங்கள்.
வெற்றிச் சிகரத்தில் கொடி நாட்டலாம்.




***
thanks படித்ததில் பிடித்தது
***


"வாழ்க வளமுடன்"

2 comments:

சமுத்ரா சொன்னது…

nice one..thanks

prabhadamu சொன்னது…

/// Samudra கூறியது...
nice one..thanks
////


நன்றி நண்பா. உங்கள் பொன்னான நேரத்தை ஆழ்கடலுக்கு அளித்ததுக்கு மிக்க நன்றி நண்பரே.

உங்கள் வருகைக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி.


:)

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "