...

"வாழ்க வளமுடன்"

06 நவம்பர், 2010

சிறுகீரை அதன் மருத்துவ குணங்கள்!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சிறுகீரை ஒரு சத்து மிகுந்த கீரையாகும்.



இச்சிறுகீரையில் உள்ள சத்துக்கள்:


இச்சிறுகீரையில் 90 விழுக்காடு நீர் இருக்கிறது
சக்தி - 33 கலோரி,
நீர்சத்து - 90கிராம்,
புரதம் - 2.8கிராம்,
கொழுப்பு - 0.3கிராம்,
தாதுக்கள் - 2.1கிராம்,
கார்போஹைட்ரேட் - 4.8கிராம்,
கால்சியம் - 251 மில்லி கிராம்,
பாஸ்பரஸ் - 55 மில்லி கிராம்,
இரும்பு - 27.3 மில்லி கிராம்

ஆகிய சத்துக்கள் உள்ளன.

***

பயிரிடப்படும் முறை:

சாதாரணமாக இந்தியாவெங்கும் தோட்டங்களிலோ, வீட்டுத் தோட்டங்களிலோ பயிர் செய்யப்படும் கீரை வகைகளில் இக்கீரையும் ஒன்றாகும். இக்கீரையானது வட இந்திய மலைப் பகுதிகளில் ஏராளமாக விளையக்கூடியது.

*

இந்தக் கீரையானது முளைக்கீரை, தண்டுக் கீரை ஆகிய கீரைகளின் இனத்தைச் சார்ந்த சிறிய கீரை வகையாகும். சுமார் இருபது செ.மீ. உயரம் வரை வளரக்கூடியது; செங்குத்தாக வளரும். நிறைய கிளைகள் உடையதாக இருக்கும். இச்செடி மிக மெல்லிய தோற்றமுடையது.

*

இச்செடி 10 செ.மீ. உயரம் வளர்ந்தவுடனேயே கீரையைப் பறித்து உணவுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும். இக்கீரையை மசியலாகச் செய்து உணவுடன் சேர்த்துக் கொள்ளலாம். கறி சமைக்கவும் இக்கீரை உதவுகிறது. இக்கீரையின் இலைகளையும் தண்டுகளையும் முளைக்கீரையைப் போலவே உணவாகத் தயா¡¢த்துப் பயன்படுத்தலாம். இக்கீரை விதையும் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது.

*

இக்கீரை இந்தியாவெங்கிலும் தோட்டப் பயிராகவும், காட்டுப்பயிராகவும் பயி¡¢டப்படுகிறது. வீட்டுத் தோட்டங்களிலும் பயிர் செய்யலாம். விதையைப் பாத்திகளில் விதைத்து வளர்க்கலாம். இக்கீரையைப் பயி¡¢டுவதற்கு முன் இதற்கு¡¢ய பாத்தியை முன்பே ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்.

*

பாத்திகளைக் கொத்தி எருவிட்டு வைத்துக்கொள்ளுதல் நலம். கோடைகால இறுதியில் விதைகளை அதிக நெருக்கமில்லாமல் விதைப்பது நல்லது. விதைத்த பாத்திகளில் பூவாளியினால் தண்ணீரைத் தெளிப்பது சிறந்த முறையாகும். இவ்வாறு தண்ணீரை காலை வேளைகளில் தெளிப்பதுதான் நல்லது.

*

ஐந்தாறு நாட்களில் விதைகள் எல்லாம் நன்கு முளைத்துவிடும். இருபத்தைந்து நாட்களில் கீரை தயாராகிவிடும். நாற்பது அல்லது ஐம்பது நாட்களில் கீரை தக்க முதிர்ச்சியடைந்துவிடும். அப்பொழுது கீரையைச் செடியோடு பிடுங்கி உபயோகப்படுத்தலாம்.

*

இக்கீரைக்கு தண்ணீர் அதிகம் தேவையில்லை. ஆனால் பாத்தி எப்போதும் ஈரமாக இருக்கவேண்டும். இக்கீரைக்கு நிழல் கூடாது, வெளிச்சம் மிகுதியும் தேவை. ஆனால் வெப்பம் மிகுதியான காலங்களில் இக்கீரைக்கு அடிக்கடி நீர்பாய்ச்சுதல் வேண்டும்.


***

மருத்துவ குணங்கள்:

பெயரில் தான் சிறுகீரையே தவிர பலன்கள் அதிகம். இக்கீரையை பருப்புடன் சேர்த்துக் கடைந்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சொல்லாமல் கொள்ளாமல் விலகும்.

*

இந்தக் கீரையை தினமும் சமைத்துச் சாப்பிட இரும்புச் சத்தும், புதுரத்தமும் உடலில் பரவும்.


*

காச நோய் குணமாகும். நீர்க்கடுப்பு, வீக்கம், பித்தநோய் சரியாகும்.

*

பெண்களின் மேனி எழிலுக்கு ஒரு வரப்பிரசாதம் இக்கீரை. உடல் நலிவுக்கு மருந்து சாப்பிடும்போது மட்டும் சிறுகீரை சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்த்து விட வேண்டும்.

*

சிறுகீரை ஒரு சத்து மிகுந்த கீரையாகும். இது மருத்துவ மகத்துவம் வாய்ந்தது. இந்தக் கீரையையினால் உடலுக்கு அழகும் வனப்பும் கிடைக்கும்.இது காச நோய்,படலம்,பாதரச வேகம், வெரணம், மூத்திரக் கிரிச்சர வீக்கம், பித்த் நோய், தாவரங்களினால் ஏற்படும் நஞ்சு முதலியவைகள் நீங்கும்.

*
மேலும் இக்கீரை வாத நோயை நீக்க கூடியது என்பார்கள்.அத்துடன் கல்லீரலுக்கும் நன்மையைச் செய்யும். விஷக்கடி முறிவாக பயன்படக்கூடிய இக்கீரை , சிறுநீரகம் தொடர்பான குறைபாடுகளையும் அகற்றவல்லது.

*

இக்கீரையுடன் சீரகம், மிள்கு, சோம்பு, வெங்காயம், இஞ்சி, தக்காளி, உப்பு ஆகியவற்றை சேர்த்து வேகவைத்து சூப் வைத்தும் சாப்பிடலாம், கீரையை கடைந்து சாதத்துடனும் சாப்பிடலாம்.

*

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இக்கீரையை தினமும் சாப்பிட்டால் இன்சுலின் இயல்பாக சுரக்கும் என்பார்கள்.

*

நல்ல சுவையும் நாவிற்கு ருசியும் உடலுக்கு வலுவும் கொடுக்கும் இக்கீரையை வீட்டுத்தோட்டங்களில் வளர்த்து உணவுடன் சேர்த்து பயனடையுங்கள்.

***
thanks tamil world
***

"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "