...

"வாழ்க வளமுடன்"

02 நவம்பர், 2010

உங்கள் கடமையை புன்முறுவலோடு எதிர் கொள்ளுங்கள்!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இவனை வளர்க்குறதுக்குள்ள என் பிராணனே போயிடும் போலிருக்கு... எது வேணும்னாலும் அம்மா... அம்மான்னு உயிரை வாங்குறான்.



கழுதை வயசாயிடுச்சு இன்னமும் நான்தான் அவனை எழுப்பி, பல்தேய்ச்சு... குளிப்பாட்டி... ட்ரெஸ் போட்டு ஸ்கூலுக்கு அனுப்ப வேண்டியிருக்கு... முதல்ல ரொம்ப பயந்தவன்... இப்ப என்னடான்னா... எதைச் சொன்னாலும்... 'சும்மா மொக்கை போடாதம்மான்னு!' படக்கென்று எதிர்த்து பேசுறான்' என்று புலம்பும் தாய்மாரா நீங்கள்?

*

"கல்யாணமான புதுசுல... எதுக்கெடுத்தாலும் ஸ்வீட்டா பேசுவார்... நடந்துக்குவார். நான்கூட இவரை மாதிரி ஒருத்தர் கிடைச்சது கடவுள் புண்ணியம்னு அவரை காலைத் தொட்டு அடிக்கடி கும்பிடுவேன்...

*

போகப் போகத்தான் அவரோட மறுபக்கம் தெரியுது. இவருக்குன்னு சுய அறிவே கிடையாது. அவுங்க அம்மா சொன்னா போதும்... அதையே வேத வாக்கா... எடுத்துக்கிட்டு உயிரை எடுக்குறார்?!" என்று புலம்பும் மனைவியா நீங்கள்?

*

காலையிலிருந்து... நைட்டு ஒரு மணி வரை இந்த வீட்டுக்கு மாடா உழைக்கிறேன்... சாப்பிட்டியா... எதாவது உதவி செய்யவான்னு கேட்க ஒரு நாதியில்லே... இத்தனை மனுசங்க இருந்தும் என்ன பிரயோஜனம்? ஒரு டம்ளரை எடுத்து வைக்கணும்னாலும் நான்தான் தேவைன்னு புலம்பும் இல்லத்தரசியா நீங்கள்?

*

அப்படி என்றால் இந்தக் கட்டுரையை முதலில் படியுங்கள்.குழந்தைகள், நம்மை உதாரணமாக எடுத்துக் கொண்டுதான் பழக்க வழக்கங்களை மேற்கொள்வார்கள்.

*

பெற்றோர்கள் தொலைக்காட்சி முன்பாக உட்கார்ந்து கொண்டு ரிமோட்டை சுழற்றியபடி, டிவி பார்க்காதே... விளையாடாதே என்று கூறினால் எப்படி கேட்பார்கள்?

**

1. குழந்தைகளை நன்றாக வளர்க்கத் தெரியாத சில பெற்றோர்கள், 'அவன் யார் சொன்னாலும் கேட்கமாட்டான்!' என்று பெருமையாகக் கூறுவார்கள். இல்லாவிட்டால் டீச்சரிடம் சென்று நன்றாக கண்டிக்குமாறு கூறுவார்கள். இதெல்லாம் தேவையில்லாத செயல்.

*

2. குழந்தைகள் நம்முடைய பேச்சை கேட்கவில்லை என்றால் அவர்களை கண்டிப்பதற்கு முன்பாக 'நம்மை எங்காவது திருத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறதா?' என்று ஆராய்ந்து பாருங்கள்.

*

3. நம் குழந்தைகளுக்கு நல்ல குண நலன்களையும், ஒழுக்கத்தையும், பழக்க வழக்கங்களையும் நாம்தான் கற்றுத்தர வேண்டும். அவர்கள் படிப்பில்... தொழிலில்... வேலையில் வெற்றி பெற வேண்டுமென்றால், அது நாம் கற்றுத் தந்துவிட்டால், வாழ்க்கையில் அவர்கள் பிரகாசிப்பது ரொம்ப சுலபம்.

*

4. படிப்பும், வேலையும் அவரவர்களுக்கு இருக்கும் திறமைக்கும், ஆர்வத்துக்கும் ஏற்ப அவர்கள் தேர்ச்சி பெற்று விடுவார்கள். படிப்பிலும், தொழிலிலும் கிடைக்கும் வெற்றி நிலைக்க வேண்டும் என்றால், அது நாம் கற்றுத்தரும் பண்புகளால்தான் முடியும்.

*

5. நல்ல விஷயங்களை போதனையாக... அறிவுரையாக சொல்லி திருத்துவதை விட கதைகள், உதாரணங்கள் மூலம் எடுத்துக் கூறினால் அவர்களை எளிதாக சென்றடையும்.

*

6. திருமணமான புதிதோ அல்லது பல வருஷங்கள் கழிந்தோ... சில பெண்களுக்குத் தங்களுடைய கணவரைப் புரிந்துக் கொள்ளாமல் இருப்பார்கள். இதற்கு மனைவி மட்டும் காரணம் அல்ல... கணவனும்தான்.

*

7. வெளியே... அலுவலகத்தில் ஏற்படும் கசப்புகளை வீட்டுக்குள் காண்பிக்கும்போதுதான் தம்பதிகளுக்குள் பிணக்கு ஏற்படுகிறது. அளவோடு பேசுங்கள்.

*

8. அதிகமாக பேசுவதால்தான் அது வாக்குவாதமாக மாறி சண்டையில் முடியும். குறைவாக பேசும்போது, உங்கள் பேச்சுக்கு கணவர் மதிப்பு கொடுப்பார். நிறைய பேசுவதை கேட்பதற்கு ஆண்களுக்கு பொறுமை கிடையாது. தேவையில்லாமல் பேசுவதால், தேவையான பேச்சும் கேட்கப்படாமல் போய்விடக்கூடும்.

*

9. "வெற்றியை அடைய குறுக்கு வழியில் செல்லாமல் நேர்வழியில் செல்வது... அம்மாவிடமிருந்து உறுதியான மறுப்பு வரும்போது அதை செய்யக்கூடாது... ஏதாவது கலை அல்லது விளையாட்டில் சிறப்பு கவனம்..." ஆகியவற்றை அனுபவத்தால் உணரக்கூடிய சிறிய வயது விஷமங்களை கண்டித்துக் கொண்டே இருக்காமல், அனுபவம் மூலம் தெரிந்து கொள்ளவிடுவது.

*

10. ஒரு செயலை செய்ய வேண்டும் அல்லது செய்யக் கூடாது என்று நாம் சொல்வதற்கான காரணத்தை அவர்கள் தெரிந்து கொள்ள செய்ய வேண்டும்.

*

11. தம் மீது பெற்றோர்கள் சந்தேகப்பட மாட்டார்கள் என்ற நம்பிக்கை... கணவர் உங்களைத் திட்டுவதையோ... உங்களோடு சண்டை போடுவதையோ, பிறர் முன்பாக செய்வதை நீங்கள் விரும்பவில்லை என்பதை அவரிடம் தனியாக எடுத்து சொல்லுங்கள்.

*

12. அவரைப் பற்றிய குறைகளை அம்மாவிடமும், தோழியுடனும் பேசுவதை விட, அவரிடமே பேசினால் நல்ல பலன் கிடைக்கும். நம் குழந்தைகள் சந்தோஷமான குழந்தைகளாக வளர்வதற்கும், நல்ல பண்புகள் கொண்ட வருங்கால இளைஞர்களாக இருப்பதற்கும், சாதனைகள் புரிவதற்கும் அடிப்படை காரணம் பெற்றோர்களின் வளர்ப்புதான்.

*

13. உங்களுடைய குழந்தைகளுக்கு பணம் சம்பாதிக்க... அல்லது பணத்தை சேர்த்து வைக்கவோ கற்றுத் தர வேண்டாம். நல்ல குணங்களை... வாழ்க்கையை கற்றுக் கொடுங்கள்.

*

14. சம்பாதிக்கவும், சேமிக்கவும் அவர்களே கற்றுக் கொள்வார்கள். உங்களது லட்சியத்தை அவரிடம் சொல்லுங்கள். அதை அடைவதில் உங்கள் முயற்சியையும், ஆர்வத்தையும் காட்டுங்கள்.


*

15. அவர்கள் ஏதாவது குற்றங்குறைகள் செய்யும் போது உங்களுடைய கணவருடைய ரேஞ்சுக்கு கண்டிக்காமல்... அல்லது தண்டிக்காமல் பக்குவமாக எடுத்துச் சொல்லுங்கள்.

*

16. எக்காரணம் கொண்டும் கணவருக்கு தெரியாமல் அவர்களுக்கு எந்த விதத்திலும் எதுவும் செய்ய வேண்டாம். ஏனென்றால் அதுவே உங்களுக்கு எதிராக திரும்பிவிடும்.

*

17. கணவர், குழந்தைகள், கணவரின் குடும்பத்தார் என எல்லோருக்கும் நீங்கள் தேவை என்பதை ஏன் நெகட்டிவ்வாக எடுத்துக் கொள்கிறீர்கள்... அதையே பாசிட்டிவ்வாக நினைத்துப் பாருங்கள்...

*

18. எல்லா மனிதர்களும் கஷ்டம் என்றால் ஆண்டவனைத் தானே நினைக்கின்றோம், அதைப் போல்தான் எது தேவை என்றாலும் உங்களை நினைக்கின்றார்கள்... உங்களை அழைக்கின்றார்கள்.

***
THANKS palani
***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "