...

"வாழ்க வளமுடன்"

20 அக்டோபர், 2010

கீரையும், வெந்தயமும் நம் உடலுக்கு இன்றியமையாதவை!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடிய உணவு வகைகளில் என்னென்ன சத்துக்கள் உள்ளன என்பது குறித்து, நாம் அதிகம் சிந்திப்பதில்லை. திருப்பூரைச் சேர்ந்த கபீர் என்பவர், கீரை மற்றும் வெந்தயம் குறித்த விவரங்களை தொகுத்தளிக்கிறார்:

*

கீரை ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்:



கீரைகள், காய்கறிகள் உடல் வளர்ச்சிக்கும், நல்ல ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியம். இவை அதிகளவில் முக்கிய சத்துக்களை கொண்டுள்ளன. இந்தியாவில் பல வகை கீரைகள் உணவாக உட்கொள்ளப்படுகின்றன.

*

அவற்றில் மிகவும் பெயர் பெற்றவை...

அரக்கீரை,
பாலக்கீரை,
தண்டு கீரை,
புளிச்சக்கீரை,
வெந்தயக்கீரை,
முருங்கைக் கீரை மற்றும் புதினா தழை போன்றவையாகும்.

***

தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் பயன்கள்:

1. கீரைகள் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், ரத்த சோகை வருவதை தடுத்து, நல்ல உடல் நலனை பெறலாம்.

*

2. கீரை சுண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின் சி போன்றவற்றை அதிகம் கொண்ட முக்கிய மூலப்பொருளாகும்.

*

3. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், 5 வயதிற்குட்பட்ட 30 ஆயிரம் சிறு பிள்ளைகள், வைட்டமின் ஏ குறைப்பாட்டால், கண்பார்வை இழக்கும் நிலை ஏற்படுகிறது.

*

4. கீரைகளில் உள்ள கரோடின் எனும் பொருளானது, உடலில் வைட்டமின் ஏவாக மாறுவதால், பார்வை இழக்கும் நிலை தடுக்கப்படுகிறது.

*

5. கீரையில் உள்ள கரோடின்களை பாதுகாக்க, நீண்ட நேரம் வேக வைப்பதை தவிர்க்க வேண்டும்.

*

6. அதிக நேரம் சமைப்பதால், கீரைகளில் உள்ள கரோடின் எனும் சத்துப்பொருள் இழப்பு ஏற்படுகிறது.

*

7. கீரைகள் பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்களையும் கொண்டுள்ளது.

*

8. கீரைகளின் பரிந்துரைக்கப்பட்ட அளவு (ஒரு நாளைக்கு)


* பெண்களுக்கு 100 கிராம்.
* ஆண்களுக்கு 40 கிராம்.
* பள்ளி செல்லும் சிறு பிள்ளைகளுக்கு (4-6 வயது) 50 கிராம்.
* 10 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் 50 கிராம்.


***


குறிப்புகள்:


1. கீரை வகைகள் சிறுப் பிள்ளைகளில் வயிற்றுப்போக்கை ஏற்படுத்துகின்றன என நம்பப்படுகிறது. எனவே, பெரும்பாலான பெண்கள், கீரை உணவை பிள்ளைகளுக்கு கொடுக்காமல் தவிர்க்கின்றனர்.

*

2. பாக்டீரியாக்கள், கிருமிகள், சிறு பூச்சிகள் மற்றும் பிற மாசுப் பொருட்கள், தண்ணீர் அல்லது மண்ணின் மூலம் கீரையை மாசுப்படுத்துகின்றன.

*

3. எனவே, கீரையை நன்கு கழுவி சுத்தம் செய்யாமல் உணவில் சேர்க்கும் போது, வயிற்றுப்போக்கை ஏற்படுத்துகிறது. வயிற்றுப்போக்கு ஏற்படுவதை தடுக்க, சமைப்பதற்கு முன், கீரையை தண்ணீரில் நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.

*

4. கீரைகளை நன்கு சமைத்து, மசித்து, கீரையிலுள்ள நார் பொருட்களை நீக்கிய பின்னரே, சிறு குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

*

5. கீரையில் உள்ள சத்துக்கள் பயனுள்ளதாக அமைய, நீண்ட நேரம் சமைப்பதை தவிர்க்க வேண்டும். அதே நேரம், கீரை சமைக்க பயன்படுத்தும் தண்ணீரை கொட்டிவிடக் கூடாது.

*

6. கீரை சமைக்கும் போது, பாத்திரத்தை மூடி வைக்க வேண்டும். கீரையை வெயிலில் உலர்த்தினால், அதில் உள்ள பீடா கராட்டின் சத்து அழிந்து விடும்.


***

சர்க்கரை மற்றும் கொலஸ்டிரால் அளவுகளைக் குறைக்க உதவும் வெந்தயம்:




ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பதன் விளைவாக மற்ற உடல்நல குறைபாடுகள் ஏற்படுகின்றன.

*

ஐதராபாத்திலுள்ள தேசிய ஊட்டச்சத்து மையத்தின் ஆய்வுப்படி, வெந்தயம், ரத்தத்திலுள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளைக் குறைக்கின்றன என கண்டறியப்பட்டுள்ளது.

*

சர்க்கரை நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளுடன், வெந்தயம் உட்கொள்வது, உறுதுணையாய் செயல்படுகிறது. வெந்தயம் எந்த அளவு, எந்த நிலையில் மற்றும் என்ன முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதன் விவரம் கீழே உள்ளது.

***

முன்னெச்சரிக்கை விவரம்:


1. வெந்தயம் என்பது பொதுவாக உணவின் ருசியை அதிகரிக்கச் செய்ய பயன்படுத்தப்படும் பொருளாகும். இது மளிகை கடைகளில் கிடைக்கும்.

*

2. வெந்தயம் அதிக நார்சத்து (50 சதவீதம்) கொண்டவை. இவை சர்க்கரை நோயாளிகளின் ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரையையும், ரத்தத்திலுள்ள அதிக கெலஸ்ட்ராலையும் குறைக்கிறது. இத்தன்மையானது, வெந்தயத்தில் உள்ளது.

*

3. உட்கொள்ள வேண்டிய வெந்தயத்தின் அளவு, ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ராலின் அளவைப் பொறுத்தது. 25 முதல் 50 கிராம் வரை வேறுபடுகிறது.

*

4. ஆரம்ப காலத்தில், 25 கிராம் வெந்தயத்தை தினமும் இரண்டு வேளை, ஒரு வேளைக்கு 12.5 கிராம் என்ற அளவில், இரண்டு முக்கிய உணவுகளாகிய காலை மற்றும் இரவு உணவுகளோடு எடுத்து கொள்ளலாம்.


*

5. வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்தோ அல்லது பொடியாக இடித்தோ, தண்ணீரிலோ, மோரிலோ கலந்து, உணவுக்கு 15 நிமிடங்கள் முன்னதாக எடுத்து கொள்ள வேண்டும்.

*

6. இரவு முழுவதும் ஊற வைக்கப்பட்ட விதைகள் அல்லது பொடியாக இடித்தெடுக்கப்பட்ட விதைகளை, தோசை, சப்பாத்தி, இட்லி, பொங்கல், உப்புமா, தயிர், பருப்பு மற்றும் காய்கறி கூட்டுகள் செய்யும் போது, அவற்றுடன் சேர்த்து பயன்படுத்தலாம்.

*

7. இப்படி செய்யும் போது, விதைகளின் கசப்புத்தன்மை ஓரளவுக்கு குறைகிறது. இவைகளை தயார் செய்யும் போது, உண்பவரின் ருசிக்கேற்ப, உப்பையோ அல்லது புளியையோ சேர்த்து தயார் செய்யலாம்.

*

8. ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அதிகளவு இருக்கும் வரை இவ்விதைகளை உட்கொள்ளலாம்.

*

9. வெந்தயம் எடுத்து கொள்வதுடன், தினமும் நடைபயிற்சி போன்ற உடற்பயிற்சிகளை செய்வதும் மிகவும் அவசியம். உடல் எடையை குறைப்பதன் மூலம், இன்சுலின் ஹார்மோனின் செயல்களை அதிகரிக்கச் செய்யும்.

*

10. எனவே, அதிக கலோரி கொடுக்கக்கூடிய, குறிப்பாக “சாச்சுரேட்டேட்’ கொழுப்பு உள்ள உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

*

12. இவ்விதைகளை உட்கொள்ளும் நோயாளிகளில் சிலருக்கு, ஆரம்பத்தில் வயிற்றுப்போக்கு மற்றும் குடலில் வாயு உற்பத்தியாவது அதிகமாக காணப்படும்.

*

13. வெந்தயத்தை உணவாக பயன்படுத்துவதுடன், பரிந்துரைக்கப்பட்ட மற்ற சர்க்கரை நோய் சிகிச்சை முறைகளையும் பின்பற்ற வேண்டும். இப்படி பயன்படுத்தும் போது, சர்க்கரை வியாதிக்கான மருந்துகளின் அளவு குறையலாம்.

*

14. ஆயினும், உங்கள் மருத்துவர் மாத்திரமே நோயின் தன்மையை கொண்டு எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்தின் அளவுகளை தீர்மானிக்க முடியும்.

*

15. சர்க்கரை நோயால் திடீரென ஏற்படும் உடல்நலக் கேடுகளுக்கு உடனடியாக மருத்துவ ஆலோசனையை நாடுவது அவசியம்.


***
நன்றி திருப்பூர் கபீர்
***



"வாழ்க வளமுடன்"

2 comments:

ராம்ஜி_யாஹூ சொன்னது…

nice

prabhadamu சொன்னது…

/// ராம்ஜி_யாஹூ கூறியது...
nice

////

உங்கள் பொன்னான நேரத்தை ஆழ்கடலுக்கு அளித்ததுக்கு மிக்க நன்றி நண்பரே.


உங்கள் வருகைக்கும் ஊக்கத்துக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.


:)

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "