...

"வாழ்க வளமுடன்"

21 அக்டோபர், 2010

ஆபத்தான பழக்கம்! ( மருத்துவ ஆலோசனைகள் )

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
1. சில நேரங்களில் மனிதர்களுடைய இயல்புகள் ஆச்சர்யமாக இருக்கின்றன. இரண்டு நாள் காய்ச்சலில் படுத்தால் மூன்றாவது நாள் வேலைக்கு வந்ததும் விசாரிக்கிறவர்களிடம் வைரஸ் ஃபீவர் என்கிறோம்.

*

2. அதே நீண்ட காலமாக இருக்கிற மூட்டு வலி, முதுகு வலி போன்ற பிரச்னைகளையும் பகிர்ந்து கொள்கிறோம். ஆனால் டயாபடீஸ், ஹைபர் டென்ஷன் உட்பட முக்கிய விஷயங்களை பலர் தங்கள் சகாக்களிடம் சொல்வதில்லை. இது மிகவும் தவறான, ஆபத்தான பழக்கம்.

*

3. நம்மிடம் இருக்கிற எந்த நீண்ட கால நோய்களையும் நமக்கு அருகில் நம்மோடு இருக்கிறவர்களுக்குத் தெரியப்படுத்துவதுதான் நல்லது. பலர் நோய் என்பதே ஒரு பர்சனல் விஷயம் போல பாவிக்கிறார்கள்.

*

4. அப்படி இல்லை என்பதை நாம் ஒவ்வொருவருமே உணர வேண்டும். நம் அருகில் இருக்கிறவர்களுக்கு ஆபத்துக் காலத்தில் அவர்கள் தெரிவிக்கிற தகவலால் நாம் உதவி அடைய முடியும்.

*

5. உதாரணமாக, டயாபடீஸ் இருக்கிறவர்களுக்கு திடீரென்று மயக்கம் வரலாம். அருகில் இருக்கிற நண்பர்களுக்கு அவர் சர்க்கரை நோயாளி என்பது தெரிந்தால்தான் டாக்டரிடம் அந்தத் தகவலைச் சொல்லி உடனடியாக அவர்களைக் காப்பாற்ற முடியும்.

*

6. இந்த நிலை ஒவ்வொரு நோய்க்குமே பொருந்தும். நம் உடல்நலம் பகிர்ந்து கொள்ளப்படவேண்டும். டயாபடீஸ் பிரச்னையைச் சொல்லாமல் வேலைக்கு நடுநடுவே ஒருவர் நேரத்திற்குச் சாப்பிடப் போனால் மேலதிகாரிகளுக்குக் கோபம் வரலாம். அதுவே அந்தப் பிரச்னை தெரிந்தால் அவர்களே ஒத்துழைப்புத் தருவார்கள்.

*

7. நோய்கள் ஒவ்வொன்றும் நாம் விரும்பிக் கேட்டுப் பெற்றவையோ அல்லது நம்மைத் தவிர வேறுயாருக்கும் வராத ஒன்று போலவோ நாம் நடந்து கொள்ளத் தேவையில்லை.

*

8. நமக்கு டீ பிடிக்காது என்று தெரிந்தால்தான் நண்பர் வீட்டில் அடுத்தமுறை நமக்கு டீ தரமாட்டார்கள். டயாபடீஸ் என்று தெரிந்தால்தான் ஒவ்வொரு முறையும் கவனமாக சர்க்கரை இல்லாமல் தருவார்கள். நோயை எதுக்குச் சொல்லிகிட்டு? என்ற நினைப்பில் வெளியில் ஒவ்வொரு முறையும் நீங்கள் செய்யும் ஒவ்வொரு விஷயமும் உங்கள் உடல்நலத்திற்கு எதிரானது.

*

9. நமக்கு இந்தப் பிரச்னை, இந்த நோய் இருக்கிறது என்பதை நம் அருகில் இருப்பவர்களுக்கு, உடன் வேலை செய்பவர்களுக்குத் தெரிவிப்பது என்பது உடல்நல மேம்பாட்டில் ஒரு சிறிய தொடக்கம்.

*

10. பகிர்ந்து கொள்வதன் மூலம் ஆறுதலும், உதவியும் கிடைக்கும். ஆபத்துக் காலங்களில் அதுவே உயிர்காக்கும் முதல் உதவியாகவும் இருக்கும்.


*

Telling disease, is the first step for saving life.


***
by -அனு
thanks அனு

***


"வாழ்க வளமுடன்"

2 comments:

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

சரியாக சொன்னீர்கள், நோய்களை மறைத்தல் நமக்கே ஆபத்தை விளைவிக்கலாம். பகிர்வுக்கு நன்றி.

prabhadamu சொன்னது…

//// சைவகொத்துப்பரோட்டா கூறியது...
சரியாக சொன்னீர்கள், நோய்களை மறைத்தல் நமக்கே ஆபத்தை விளைவிக்கலாம். பகிர்வுக்கு நன்றி.

////


உங்கள் பொன்னான நேரத்தை ஆழ்கடலுக்கு அளித்ததுக்கு மிக்க நன்றி நண்பரே.


உங்கள் வருகைக்கும் ஊக்கத்துக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி சைவகொத்துப்பரோட்டா.


:)

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "