...

"வாழ்க வளமுடன்"

08 செப்டம்பர், 2010

பழைய சாதத்துல இவ்வளவு விஷயமா?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்



திரைப்படங்களில் கிராமத்து சீன். கதாநாயகி பித்தளைத் தூக்கில் பழங்கஞ்சி எடுத்துக் கொண்டு போய் கதாநாயகனுக்குத் தருவாள். நீரும் சோறுமாக அதை அள்ளி அவன் உண்பான். இன்றைய நிஜ கிராமங்களில் கூட இந்தக் காட்சியைப் பார்க்க முடியாது.

ஆனால் முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர்.

தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!

கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது!

பழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி அமெரிக்காவில் வசிக்கும் நம் இந்திய விஞ்ஞானி ப்ரதீப் கூறியதில் இருந்து சில....

1. "காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.


2. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது.

3. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.

4. அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.

5. இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது." என்கிறார்.

6. மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.


7. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும்.


8. அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.


9. எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது.


10. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்".


**

பழைய சாதத்தை எப்படி செய்வது:

பழைய சாதத்திற்கு மிகவும் சிறந்தது பிரெளன் ரைஸ் என்று அழைக்கப்படும் கைக்குத்தல் அரிசிதான்.

ஒரு கல் சட்டி அல்லது மண் சட்டியில் சிறிது சாதத்தைப் போட்டு, சுத்தமான தண்ணீரை நிறைய ஊற்றவும்.

மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து, மோர் சிறிது சேர்த்து, சின்னவெங்காயம் சேர்த்துக் குடிக்க 'ஜில்'லென்று இருக்கும் (மிகவும் சூடாக இருக்கும் சாதத்தில் தண்ணீரை ஊற்றக் கூடாது.)


மதிய உணவு நேரம் வரை டீ, காபி கேக்காது வயிறு!

***

நன்றி: ராகவி - சினேகிதி - செப்டம்பர் 2009

***


"வாழ்க வளமுடன்"


9 comments:

பெயரில்லா சொன்னது…

நான் கேள்வி பட்டதெல்லாம் பழைய சாதம் சாப்பிட்டா எடை கூடும், நல்லா தூக்கம் வரும், சீக்கிரமா சளி பிடிக்கும் அப்டிதான்.. இப்போ தான் அதோட உண்மையான விஷயம் தெரியுது! பயனுள்ள தகவல்!
நன்றி.

சோழன் சொன்னது…

ரொம்ப சரியான ஆய்வு
தொட்டுக்க கடலைபயிறு நல்ல இருக்கும்.

raja basketball coach சொன்னது…

அருமை...அருமை...பழைய சோற்றின்..மகிமை...மகிமை

raja basketball coach சொன்னது…

அருமை...அருமை....பழைய சோற்றின் மகிமை...மகிமை...

GEETHA ACHAL சொன்னது…

எனக்கு மிகவும் பிடித்தது...

prabhadamu சொன்னது…

வாங்க பலா. உங்கள் வரவு நல்வரவு ஆகுக.


உங்கள் கருத்துக்கும், உங்கள் வாழ்த்துக்கும், உங்கள் தொடர்ச்சியான ஊக்கத்தும், உங்கள் பொன்னான நேரத்தை ஆழ்கடலுக்கு அளித்ததுக்கும் மிக்க நன்றி நண்பா.

நீங்கள் சொல்லுவது பற்றி எனக்கு சரியாக தெரியவில்லை நண்பா. இருந்தாலும் பழைய சாதம் உடலுக்கு மிகவும் நல்லது என்று என் பாட்டி சொல்லி கேள்வி பட்டு இருக்கேன்.

எங்கள் வீட்டில் அனைவரும் இதனை விரும்பியும் சாப்பிடுவோம்.

prabhadamu சொன்னது…

வாங்க சோழன். உங்கள் வரவு நல்வரவு ஆகுக.


உங்கள் கருத்துக்கும், உங்கள் வாழ்த்துக்கும், உங்கள் தொடர்ச்சியான ஊக்கத்தும், உங்கள் பொன்னான நேரத்தை ஆழ்கடலுக்கு அளித்ததுக்கும் மிக்க நன்றி நண்பா.


///தொட்டுக்க கடலைபயிறு நல்ல இருக்கும்.///


:)

prabhadamu சொன்னது…

வாங்க raja basketball coach. உங்கள் வரவு நல்வரவு ஆகுக.


உங்கள் கருத்துக்கும், உங்கள் வாழ்த்துக்கும், உங்கள் தொடர்ச்சியான ஊக்கத்தும், உங்கள் பொன்னான நேரத்தை ஆழ்கடலுக்கு அளித்ததுக்கும் மிக்க நன்றி நண்பா.

prabhadamu சொன்னது…

நன்றி அக்கா. கீதா அக்கா (GEETHA ACHAL) எங்கள் வீட்டில் அனைவரும் இதனை விரும்பியும் சாப்பிடுவோம்.


உங்கள் கருத்துக்கும், உங்கள் வாழ்த்துக்கும், உங்கள் தொடர்ச்சியான ஊக்கத்தும், உங்கள் பொன்னான நேரத்தை ஆழ்கடலுக்கு அளித்ததுக்கும் மிக்க நன்றி நண்பா.


பழைய சாதம் உடலுக்கு மிகவும் நல்லது என்று என் பாட்டி சொல்லி கேள்வி பட்டு இருக்கேன்.

:)

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "