...

"வாழ்க வளமுடன்"

22 ஏப்ரல், 2010

உணவு மூலம் உங்கள் குணம் !

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
நீங்கள் உண்ணும் உணவு மூலம் உங்கள் குணம் வெளிப்படுகிறதாம்.



எல்லோரும் தான் சாப்பிடுகின்றார்கள். ஆனால் ஆரோக்கியமாக சாப்பிடுபவர்கள் குறைந்தளவானவர்களே. என்ன சாப்பிடுகிறோம் என்பது போலவே அதை எப்படிச் சாப்பிடுகின்றோம்.... சாப்பிடும் போது நம் உடலின் தன்மை என்ன போன்றவற்றையும் கவனிக்கப்பட வேண்டிய விடயங்கள்.

*

ஏனெனில் நாம் சாப்பிடும் பொருட்கள் வெறுமனே உடலுக்கு ஊட்டம் தருவதோடு நின்று விடுவதில்லை. நம் குணத்தை தீர்மானிப்பதிலும் அவை கணிசமான அளவு பங்கு வகிக்கின்றன.

*

உதாரணமாக ஒருவர் பால், நெய், காய்கள், பழங்கள், கீரைகள் , தானியங்கள், பருப்பவகைகள் என சாத்வீக உணவுகளை சரியான அளவில் சாப்பிட்டு வந்தால் அவர் அமைதியான குணம் கொண்டவராக இருப்பார். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் பதட்டம் அடையாமல் தெளிவாக கிரகித்து முடிவுகள் எடுக்கும் பக்குவம் கொண்டவராக இருப்பார்.


காரம் உப்பு புளிப்பு என அழுத்தமான உணவுகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டு மாமிசங்கள் எண்ணையில் பொரித்த உணவுகளை விரும்பி உண்பவர்கள் எப்போதும் பதட்டம் உள்ளவர்களாக காணப்படுவார்கள். உணர்ச்சிவசப்பட்டு தப்பான முடிவுகளை எடுத்தவிட்டு பின்பு வருத்தப்பட்டு விட்டு மீண்டும் அதே தவறைச் செய்வார்கள்.


அசுத்தமான உணவு புளித்துப்போனது குளிர்சாதனப்பெட்டியில் வைத்து குளிர்ந்திருக்கும் உணவுகள் பழைய உணவு டிகட்டுப்போன உணவு போன்றவற்றை உண்பவர்கள் மந்தமாக இருப்பார்கள். நல்லது கெட்டது தெரியாமல் எதையும் நம்புவார்கள்.


***

குறிப்பு:
*
ஆயள்வேதம் தொடர்பான புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

***


ஹதம்">நன்றி ஈகரை.
http://eegarai.darkbb.com/-f14/-t11873.htmஹதம்">


***

"வாழ்க வளமுடன்"


இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "