...

"வாழ்க வளமுடன்"

08 ஏப்ரல், 2010

'தாயின் பேச்சு' குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
நம் குழந்தைகள் அதிகமான மதிப்பெண் பெற வேண்டும் என்று எண்ணும் பெற்றோர் அவர்கள் குழந்தைகள் நல்ல அறிவு திறனும், புத்திசாளி தனமாகவும், நாட்டிற்க்கு நள் குடிமகனாகவும் ஆக்க மறந்து விடுகின்றனர்.




தாய்மார்களுக்கு டீவி தான் உலகம். சீரியல் தான் சூவாசம். அப்பாக்களுக்கு வேலை பளுவமும் மற்ற வேலைகளும். குழந்தைகள்? நான் எல்லரையும் சொல்ல வில்லை ஒரு சில பெற்றோர்களை தான்.

அவர்களுக்காக இந்த செய்தி.
***
தாயின் பேச்சு குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.பொதுவாக குழந்தைகள் விளையாடி மகிழ அழகிய பொம்மைகள், விளையாட்டு சாதனங்கள் மற்றும் வீடியோ கேம்கள் போன்றவற்றை பெற்றோர் வாங்கி கொடுக்கின்றனர்.அவை அவர்களின் அறிவாற்றலை வளர்க்கும் என நம்புகின்றனர்.
*
ஆனால் இவற்றைவிட குழந்தைகளிடம் தாய் தொடர்ந்து பேச்சு கொடுத்தாலே போதும், குழந்தையின் மூளை வளர்ச்சி அடைந்து அறிவுத்திறனும் வளரும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
*
லண்டனில் உள்ள வடமேற்கு பல்கலைக்கழ கத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இதுபற்றி ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அவர்கள் பிறந்த 3 மாதமே ஆன 50 குழந்தைகளிடம் இந்த ஆய்வு நடத்தினார்கள்.
*
அந்த குழந்தைகளிடம் அவர்களின் தாய்மார்களை அடிக்கடி பேச்சு கொடுக்கும்படி தெரிவித்தனர். மேலும், மீன், மாடு போன்றவற்றின் படங்களை காட்டி அவற்றின், பெயர்களை கற்றுக் கொடுக்கும்படியும் வலியுறுத்தப்பட்டது.
*
அவர்கள் கொடுத்த பயிற்சியின்படி 3 மாத குழந்தைகள் படங்களை பார்த்து அவற்றின் பெயர்களை உச்சரிக்க தொடங்கினர். மேலும் பல படங்களின் மூலம் அவற்றின் பெயர்களை தெரிவித்தனர்.
*
இந்த ஆய்வின் மூலம் குழந்தைகளிடம் தாய்மார்கள் பேச்சு கொடுத்தாலே போதும், குழந்தைகளின் அறிவுத்திறன் வளரும் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
***
இனியாவது நாம் யோசிப்போமா! சிறு குழந்தைகளின் தாய்மார்களே இது உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்று எண்ணுகிறோன்.
*

நன்றி!

***
நன்றி!
***

"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "