...

"வாழ்க வளமுடன்"

05 நவம்பர், 2011

இடுப்பை 'சிக்’கென்று வைத்துக் கொள்ள உணவு முறைகள்...

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


காலையில் டீ, காபி குடிப்பதைத் தவிர்த்து, சுடு தண்ணீரில் எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் கலந்து குடிக்கலாம்.


பூசணிக்காய், வாழைத்தண்டு இவற்றுக்கெல்லாம் கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை அதிகம். எனவே, ஒரு நாள் வாழைத் தண்டு சாறு, மறுநாள் பூசணிக்காய் சாறு என்று மாற்றி மாற்றி வெறும் வயிற்றில் அருந்தலாம்.


நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களைச் சாப்பிடலாம்.


எண்ணெயில் பொரித்த உணவுகளை அறவே தவிர்க்கலாம். வேக வைத்த உணவுகளைச் சாப்பிடுவது நல்லது. நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை அதிக அளவு சேர்த்துக் கொள்ளலாம்.


அதிக கலோரி உள்ள உணவுப் பொருட்களைத் தொடவே வேண்டாம். நொறுக்குத் தீனி ஆசையைத் தடுக்க முடியாவிட்டால்... அவல், அரிசிப்பொரி, காய்கறி சாலட் சாப்பிடலாம்.


சாப்பிட்டு முடித்தவுடன் 10 நிமிடங்கள் கழித்து சுடுதண்ணீர் அருந்தலாம்.


தினமும் உணவில் 2 டீஸ்பூன் 'கொள்ளு’ சேர்ப்பது, உடலில் அதிக கொழுப்பு சேர விடாமல் தடுக்கும்.


டி.வி பார்த்துக் கொண்டே சாப்பிடுவது கூடாது. இதனால், சாப்பாட்டின் அளவு தெரியாமல் போய்விடும்.


தினமும் ஒரு சிறிய வெங்காயத்தைப் பச்சையாக சாப்பிடுவது, ரத்தத்தில் தங்கியிருக்கும் கொழுப்பை சரிசெய்துவிடும்.



***
thanks Mohamed
***




"வாழ்க வளமுடன்"

3 comments:

சாகம்பரி சொன்னது…

மிகவும் தேவையான குறிப்புகள். கொள்ளு நன்றாக வறுத்து பொடியாக்கிக் கொண்டால் சாப்பாட்டில் ரசம் போன்றவற்றுடன் சேர்த்துக் கொள்ளலாம். பகிர்விற்கு நன்றி

prabhadamu சொன்னது…

///சாகம்பரி கூறியது...
மிகவும் தேவையான குறிப்புகள். கொள்ளு நன்றாக வறுத்து பொடியாக்கிக் கொண்டால் சாப்பாட்டில் ரசம் போன்றவற்றுடன் சேர்த்துக் கொள்ளலாம். பகிர்விற்கு நன்றி

////

thanks amma :)

prabhadamu சொன்னது…

///// Online Works For All கூறியது...
Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

////

:)

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "