17 மார்ச், 2010

மலை வேம்பு

மலை வேம்பு மரங்கள்:




மலை வேம்பு குறைந்த அளவு நீர்வளம் கொண்ட நிலங்களிலும் நன்கு வளரும். வடிகால் வசதி கொண்ட அனைத்து நிலங்களுக்கும் ஏற்றது. குறிப்பிட்ட உயரம் வரை (20-25 அடி உயரம் வரை) பக்கக் கிளைகள் வராது. பராமரிப்பு எளிது.



மிக வேகமாக வளரும் தன்மை உடையது. மரக் கழிவு அதிகம் இல்லை. பராமரிக்க குறைந்த ஆட்களே தேவை. மலைவேம்பு நடவு செய்த 5 ஆண்டுகள் வரை ஊடுபயிர் செய்யலாம். இலை ஆடுகளுக்கு நல்ல தீவனமாக பயன்படுகிறது. வாழை, நிலக்கடலை, மிளகாய், மரவள்ளி, மஞ்சள், உளுந்து ஆகிய பயிர்களில் ஊடுபயிராகப் பயிரிடலாம்.


*


பிளைவுட் மட்டுமல்லாது பல வகை உபயோகத்திற்கும் பயன் படுகிறது. மலைவேம்பில் 2 வகை உள்ளது. மீலியா டூபியா என்ற தாவரவியல் பெயர் கொண்ட மலைவேம்பு பயிர் செய்ய ஏற்றது. துலுக்க வேம்பு என்று அழைக்கப்படும் இன்னொருவகை வேம்பு நிறைய கிளைகளுடன் தரமற்ற மரமாக வளரக் கூடியது. இது பயிர் செய்த சில மாதங்கள் கழித்தே தெரியவரும்.

*
உலகம் வெப்பமயமாதலைத் தடுக்கும் ‘மலை வேம்பு’ மரங்கள்.
***
தினமலர் விவசாய மலர்.
நன்றி விவசாய மலர்


***

8 கருத்துகள்:

  1. நல்ல பயனுள்ள பதிவு நண்பா, தமிழிஷ்ல ஏன் இணைக்க வில்லை, பலர் பயனடைவர்

    உங்களுக்கு நிறைய சந்தேகம் இருப்பதாக சொல்லி இருந்தீகள்.

    followers கொண்டுவர

    layout- add a gadget - followers - save கொடுங்கள் வரும்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி சசி நண்ரே! உங்கள் வருகைக்கும் பதிலுக்கும் மிக்க மகிழ்ச்சி.

    என்னுடையதில் followersல் சோதனை முயற்ச்சி தான் இருக்கு. இன்னமும். அதுதான் பிரச்சனை நண்பா.

    பதிலளிநீக்கு
  3. நன்றி ஜெய்லானி உங்கள் வருகைக்கும் பதிலுக்கும் மிக்க மகிழ்ச்சி.


    ///நிறைய போடுங்க///

    கட்டாயம் என்னால் முடிந்த வரை போடுகிறேன் தோழி.

    பதிலளிநீக்கு
  4. மிகவும் பயனுள்ள தகவல்.தொடர்ந்து எழுதுங்கள் பிரபாதாமு.. வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  5. நன்றி மலிக்கா. உங்கள் வருகைக்கும் பதிலுக்கும் மிக்க மகிழ்ச்சி.

    உங்கள் பதில்கள் எனக்கு தொம்பூட்டுகிறது. நன்றி மல்லிகா.

    பதிலளிநீக்கு
  6. நன்றி வாணி .

    உங்கள் பதில்கள் எனக்கு தொம்பூட்டுகிறது. நன்றி.

    பதிலளிநீக்கு